மனஅழுத்தத்துக்கு தீர்வு.. இந்தியாவில் அறிமுகமான Homecoming புத்தகம்.. இது டாப் பெண்களின் அனுபவம்
டெல்லி: மனஅழுத்தத்தை தற்போது பலரும் எதிர்கொண்டு வருகிறோம். இது அதிகமாகும்போது தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புள்ளது. மனஅழுத்தத்தில் இருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். இந்நிலையில் தான் இந்தியாவில் முதல் முதலாக மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது பற்றி தொழில்முனைவோர், கல்வியாளர்கள் என்று 11 பேர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ‛ஹோம் கம்மிங்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் மையத்தில் நேற்று ‛வெஸ்ட்லேண்ட் புக்ஸ்’ சார்பில் நேஹா கிர்பால் மற்றும் டாக்டர் நந்தினி முரளி ஆகியோர் இணைந்து எழுதிய ‛‛Homecoming: Mental Health Journey of Resilience, Healing and Wholeness’’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்திய மனநலஆரோக்கியம் அலையன்ஸ் (IMHA or India Mental Health Alliance) அமைப்புடன் இணைந்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

பெண்களின் அனுபவம்
தற்போது ஒவ்வொரு மனிதர்களும் மனதளவில் பிரச்சனைகள், சவால்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மனநல பிரச்சனைகள், சவால்களை எப்படி எதிர்கொள்வது, அதனை கடந்து எப்படி சாதிப்பது என்பது பற்றி பல பெண்கள் தங்களின் அனுபவத்தில் இருந்து இந்த புத்தகத்தில் கூறியுள்ளனர்.

11 பேரின் கருத்துகள்
தொழில் முனைவோர்,சமூக ஆர்வலர்கள், மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், கொடையாளர்கள் உள்பட 11 பெண்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். இந்த புத்தகத்தில் மனசோர்வு, ஓசிடி, பதற்றம், தலைமுறைகள் இடையேயான இடைவெளி பிரச்சனை, தற்கொலை உயிரிழப்புகள் குறித்து கூறியுள்ளனர்.

அனுபவ பகிர்வு
புத்தக ஆசிரியர்களான நேஹா கிர்பால் ,டாக்டர் நந்தினி முரளி ஆகியோருடன் டாக்டர் பூர்ணிமா விஸ்வநாதன், ஜைனாப் படேல், டாக்டர் கவிதா அரோரா, சித்ரா நையர், கைரவி பரத் ராம், டாக்டர் பெரோசா ஜே. கோத்ரேஜ் மற்றும் ஜனனி ஐயர் உள்ளிட்டவர்களும் தங்களின் அனுபவங்களை விழா மேடையில் பகிர்ந்துள்ளனர். அதேபோல் சட்டம் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களும் பங்கெடுத்து தங்களின் அனுபவங்களை கூறினர்.

நேஹா கிர்பால் பேச்சு
இந்த விழாவில் அமஹா ஹெல்த், சில்ட்ரன் ஃபர்ஸ்ட், இந்திய மனநல ஆரோக்கிய அலையன்ஸ் (IMHA) மற்றும் இந்தியா ஆர்ட் ஃபேரின் முன்னாள் நிர்வாகியும், புத்தக ஆசிரியருமான நேஹா கிர்பால் கூறுகையில், ‛‛மனச்சிதைவு (schiophrenia)உள்ள பெற்றோருக்கான பாதுகாவலராகவும், உடன்பிறந்தவரை இழந்தவர் என்ற அடிப்படையில் மனநலம் சார்ந்த சேவைகளுக்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது முக்கியமானது.
'ஹோம்கமிங்' புத்தகம் பல நபர்களின் கதைகளை கொண்டுள்ளது. இந்த புத்தகம் தனிநபர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் அமைப்புகளை உருவாக்க இது ஊக்குவிக்கும்'' என கூறினார்.

நந்தினி முரளி பேச்சு
இந்த விழாவில் Speak நிறுவனர், அவ்தார் எனும் பாலினம் மற்றும் பன்முகத்தன்மை அமைப்பின் லேர்னிங் - ரீசர்ஜ் பிரிவு துணை தலைவராக இருக்கும் புத்தக ஆசிரியரான டாக்டர் நந்தினி முரளி கூறுகையில், ‛‛பெண்கள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பராமரிப்பு முதல் ஓரங்கப்பட்டப்டுவது வரை தினமும் பல்வேறு சுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் அவர்கள் மனநல சார்ந்த பேச்சுகளை கொடுப்பது இல்லை. இந்த 'ஹோம்கமிங்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களை நேர்மையுடன் பகரி்ந்து கொண்டுள்ளனர். அதோடு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் வகையில் விடையை எழுதி உள்ளனர்'' என்றார்.
மொத்தத்தில் சமூகத்தில் சவால்களை சந்தித்து உயர்ந்துள்ள பெண்களின் தனிப்பட்ட அனுபவங்களை ஒன்றாக்கி இருப்பதன் மூலம் இந்த புத்தகம் இந்தியாவின் மனநல பிரச்சனையில் தவிப்போருக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஏனென்றால் பெண்கள் எப்படி சோர்வு, பாகுபாடு, அடக்குமுறை உள்ளிட்டவற்றை எதிர்கொள்கிறார்கள்? அதில் விடுபடுவது எப்படி? என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது.
நேஹா கிர்பால் யார்?
இந்த புத்தகத்தை எழுதிய நேஹா கிர்பால் மனநல ஆலோசகராகவும், தொழில் முனைவோராக இருக்கிறார். இவரது பெற்றோர் மனச்சிதைவு நோயால் (ஸ்கிசோஃப்ரினியா) பாதிக்கப்பட்டவர்கள். உடன்பிறந்தவர் தற்கொலை செய்து விட்டார். இருப்பினும் வாழ்க்கையில் நம்பிக்கையை அவர் தளரவிடாமல் தனது பெற்றோரை பராமரித்து பாதுகாத்து வருகிறார்.
இந்தியா ஆர்ட் ஃபேர் என்ற அமைப்பை 2008 ம் ஆண்டு தொடங்கி 2018 ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். அதன்பிறகு மனநலம் சார்ந்த பிரச்சனைகளை போக்குவதில் கவனம் செலுத்த தொடங்கினர். 2019 ம் ஆண்டில் அமஹாவின் இணை நிறுவனராக அவர் செயல்பட தொடங்கினர்.
இதுகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மனநல ஆலோசனைகளை தரும் அமைப்பாகும்.
இன்று அது தனியார் மனநல சேவையை வழங்கும் பெரிய அமைப்பாக மாறி உள்ளது. மனநல மருத்துவர்கள் உள்பட 200க்கும் அதிகமானவர்களை ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் 600 நகரங்களில் இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட 8 பெரிய நகரங்களில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் சிறப்பு மனநல மருத்துவமனையை அமஹா திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications