பாஜக தவிர.. அத்தனை கட்சிகளையும் காலி செய்த ஆம் ஆத்மி.. டெல்லி அரசியல் மாறியது எப்படி?
டெல்லி: 2013 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி (AAP) நுழைந்ததன் மூலம் டெல்லியின் அரசியல் காட்சி குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டது. இந்த புதிய அரசியல் சக்தியால் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவின் நீண்டகால ஆதிக்கம் குலைந்தது. பிற கட்சிகள் காணாமலே போய்விட்டன. டெல்லி அரசியல் நிலைமையை ஆம் ஆத்மி தலைகீழாக மாற்றிவிட்டது.
வரலாற்று ரீதியாக, டெல்லியின் தேர்தல்கள் சுவாரசியமானவைதான். 1993 தேர்தலில் ஆறு தேசிய கட்சிகள், மூன்று மாநில கட்சிகள் மற்றும் 41 பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பங்கேற்றன. இருப்பினும், வாக்குகளின் பெரும் பகுதி தேசிய கட்சிகளுக்கு சென்றன, அவற்றில் பாஜக மற்றும் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க கட்சிகளாக இருந்தன. பகுஜன் சமாஜ் கட்சி (BSP) தனது வாக்கு பங்கை அதிகரிக்க முடிந்தது, குறிப்பாக டெல்லியின் வாக்காளர்களில் சுமார் 17% ஐ கொண்ட தலித் சமூகத்திடையே அக்கட்சியால் அறுவடை செய்ய முடிந்தது. இருப்பினும், BSP இன் குறிப்பிடத்தக்க வெற்றி 2008 தேர்தலோடு ஓய்ந்துவிட்டது, அதன் பின்னர் குறிப்பிடத்தக்க வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால், AAP இன் வருகை வாக்காளர் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. AAP வந்த பிறகு நடந்த தேர்தல்களில் வாக்குப் பங்கு பெரும்பாலும் AAP, BJP மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே பிரிக்கப்பட்டுள்ளது, மற்ற கட்சிகளுக்கு மிகக் குறைவான வாக்கு ஷேர் மட்டுமே உள்ளது. இந்த மாற்றம் 2020 தேர்தல்களில் தெளிவாகத் தெரிந்தது.
2013-ல் AAP ஏழைகளின் கட்சி என்ற பிம்பத்துடன் உருவெடுத்தது. இதன் மூலம், பல சிறு கட்சிகள் மக்களின் ஆதரவை இழந்தன. 2015-ல் டெல்லி தேர்தலில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்து மொத்த வாக்குகளின் 97.1% பெற்றன. மீதம் உள்ள அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைகள் சேர்ந்து 2.9% வாக்குகளையே பெற்றன.
தேர்தல் வெற்றிக்கான வாய்ப்பு குறைவாக இருந்தபோதிலும், ஏராளமான சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் சகீர் ஹுசைன் டெல்லி கல்லூரியின் பேராசிரியர் ரவி ரஞ்சன், தேர்தல்களில் இந்த சிறு கட்சிகள் அல்லது அமைப்புகளின் செல்வாக்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். இதுபற்றி ரவி ரஞ்சன் கூறுகையில், சிறு கட்சிகள் அரசியல் ரீதியாக செயலில் இருக்கவும், மாநில அல்லது தேசிய அளவில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தேர்தல் ஆணையத்தின் அளவுகோல்களை பூர்த்தி செய்யவும் டெல்லி தேர்தல் ஒரு வழியாகும்.
முக்கிய தொகுதிகளில் முன்னணி போட்டியாளர்களின் பெயர்கள் அல்லது சுயவிவரங்களுடன் ஒத்துப்போகும் பெயர்களை கொண்ட வேட்பாளர்களை இந்த சிறு கட்சிகள் நிறுத்தி குழப்பம் ஏற்படுத்துவார்கள். அதுபோன்ற தந்திரங்களுக்கும் இந்த தேர்தல் பயன்படுகிறது என்கிறார் அவர். ஆம் ஆத்மியா, பாஜகவா, யார் வெல்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?












Click it and Unblock the Notifications