சத்தம் போடாமல் மிசோரமில் கால் பதித்த பாஜக!
டெல்லி: வட கிழக்கில் பாஜகவின் பரவல் இல்லாத மிசோரம் மாநிலத்தில் ஒரு வழியாக ஒரு எம்.எல்.ஏ. கிடைத்து விட்டார். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தில் இந்த சாதனையைச் செய்துள்ளது பாஜக.
199ம் ஆண்டு முதல் மிசோரமில் போட்டியிட்டு வருகிறது பாஜக. ஆனால் ஒருமுறை கூட அது ஜெயித்ததில்லை. ஆனால் 5 மாநிலத் தேர்தலில் பலத்த சேதத்தை சந்தித்துள்ள நிலையில் மிசோரமில் அது சத்தமில்லாமல் ஒரு எம்எல்ஏவைப் பெற்றுள்ளது.
இந்த ஒற்றை வெற்றியைப் பெற பாஜக கடுமையாக உழைத்திருந்தது. பாஜக மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்ஸும் களத்தில் இறங்கி வேலை பார்த்தது. அவர்களின் திட்டமிட்ட, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் இந்த வெற்றி சாத்தியமானது.

இனக் குழுக்கள்
மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மையினர். தற்போது வெற்றி பெற்றுள்ள புத்தா தன் சக்மா, சக்மா பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர். இவர்கள் சிறுபான்மையினர் ஆவர். இவர் போட்டியிட்டு வென்ற தொகுதியான துய்சவாங் தொகுதியில் சக்மா பழங்குடியினர் அதிகம் உள்ளனர். இதனால்தான் சக்மாவின் வெற்றி சாத்தியமானது.

காங்கிரஸிலிருந்து தாவியவர்
சக்மா, உண்மையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். லால் தன்வாலா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரும் கூட. தனது இனப் பிரிவைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு சீட் கேட்டு அரசை வற்புறுத்தியபோது அரசு மறுத்து விட்டது (மிஸோ இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அரசு இது). இதனால் கோபமடைந்த சக்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸை விட்டும் விலகினார்.

கப்பென்று கவ்விய பாஜக
விடுமா பாஜக... இதற்காகத்தானே அது காத்திருந்தது. சக்மாவை அணுகி பாஜகவில் அவரை சேர்த்தது. சீட்டும் கொடுத்தது. துய்சவாங் தொகுதியில் சக்மா பழங்குடியினர் தவிர புத்த மதத்தினரும் கணிசமாக உள்ளனர். இவர்களின் வாக்குகளை ஆர்எஸ்எஸ் திரட்டிக் கொடுத்தது. எல்லாம் சேர்ந்து தற்போது மிசோரமில் தாமரை மலர வழி வகுத்துள்ளன.

39ல் போட்டியிட்ட பாஜக
இந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக 39 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வென்றுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தேர்தலில் 17 தொகுதிகளில் அது போட்டியிட்டிருந்தது.

இனக்குழுக்களைச் சேர்த்து
வட கிழக்கில் தன்னால் தனித்து எதுவும் செய்ய முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். இதனால்தான் அது விவரமாக உள்ளூர் குழுக்களையும் தலைவர்களையும் இழுத்து தன் பலமாக மாற்றி வருகிறது. அந்த டெக்னிக்படிதான் மிசோரமிலும் அது கால் பதித்துள்ளது. சக்மா போலவே இன்னொரு இனக் குழுவான மாரா பழங்குடியினரையும் அது தன் பக்கம் ஈர்த்து இந்தத் தேர்தலில் அது போட்டியிட்டது. ஆனால் அது பலன் தரவில்லை.
சக்மா ஒரு பக்கம் வெற்றி பெற்றாலும் கூட மாநில பாஜக தலைவரான ஹுல்னா தான் போட்டியிட்ட தவி தொகுதியில் படு தோல்வி அடைந்துள்ளார். அதாவது டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications