இந்திய மண்ணை சீன ராணுவம் ஆக்கிரமித்தது எப்படி..பிரதமர் மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும்..சோனியா காந்தி
டெல்லி: நமது 20 ராணுவ வீரர்களின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பதை பிரதமர் மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை அதிகாலை வரை இந்தியா சீன ராணுவ வீரரகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நமது 20 ராணுவ வீரர்களின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
இந்த துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் மையப்பகுதியிலிருந்து எனது அஞ்சலி செலுத்துகிறேன். இந்த வலியை எதிர்கொள்ள தங்கள் குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இன்று எல்லை பிரச்னையால் வீரர்கள் உயிரிழந்ததால் நாட்டு மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். சீனா நமது நிலத்தை எவவாறு ஆக்கிரமித்தது. நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து எப்படி, லடாக்கில் என்ன நடக்கிறது. பிரதமர் மோடி, லடாக் எல்லை பிரச்னையில் உண்மையை சொல்ல முன்வர வேண்டும்.
நமது ராணுவ வீரர்கள் / அதிகாரிகளை இன்னும் காணவில்லையா? நமது வீரர்கள் / அதிகாரிகள் எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர்? சீனா எந்த பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது? இதைச் சமாளிக்க மத்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன? இந்த நெருக்கடியான நேரத்தில் நமது இராணுவம், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்" என்றார்.
Recommended Video
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications