போக்குக் காட்டிய போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
டெல்லி: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாபர் சாதிக் சென்னை, டெல்லியில் போதை பொருள் கடத்தியதாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை தமிழக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் டெல்லி என்சிபி அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் டெல்லி என்சிபி அதிகாரிகள், ஜெய்ப்பூரில் ஹோட்டலில் மறைந்திருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளிடம் தமிழக அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் ஜாபர் சாதிக்கின் செல்போன் சிக்னலை வைத்தும் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னணி என்ன?: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதை பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15ஆம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ வேதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ 2000 கோடியாகும். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அவரை திமுக தலைமை, கட்சியிலிருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்கியது.
இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தங்கள் அலுவலகத்தில் பிப். 26 இல் ஆஜராகுமாறு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 23 ஆம் தேதி ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மன் ஒட்டிச் சென்றனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிக்குவர் என தெரிகிறது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. அவரிடம் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கேட்பர் என தெரிகிறது.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications