போக்குக் காட்டிய போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
டெல்லி: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாபர் சாதிக் சென்னை, டெல்லியில் போதை பொருள் கடத்தியதாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை தமிழக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் டெல்லி என்சிபி அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் டெல்லி என்சிபி அதிகாரிகள், ஜெய்ப்பூரில் ஹோட்டலில் மறைந்திருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளிடம் தமிழக அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் ஜாபர் சாதிக்கின் செல்போன் சிக்னலை வைத்தும் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னணி என்ன?: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதை பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15ஆம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ வேதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ 2000 கோடியாகும். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அவரை திமுக தலைமை, கட்சியிலிருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்கியது.
இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தங்கள் அலுவலகத்தில் பிப். 26 இல் ஆஜராகுமாறு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 23 ஆம் தேதி ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மன் ஒட்டிச் சென்றனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிக்குவர் என தெரிகிறது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. அவரிடம் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கேட்பர் என தெரிகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications