கலி காலம் தொடங்கியதும்! ஸ்ரீகிருஷ்ணரின் துவாரகை நீரில் மூழ்கியது எப்படி? நடுக்கடலில் பொக்கிஷம்! வாவ்
டெல்லி: இந்துக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகரமான துவாரகை கடலில் எப்படி மூழ்கியது என்பது தெரியுமா?
குஜராத்தில் உள்ள புண்ணிய பூமியான துவாரகைக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு துவாரகை நகரம் அழிந்ததாக சொல்லப்படும் இடத்தில் ஆழ்கடலில் இறங்கி மயில் இறகை வைத்து வழிபாடு நடத்தினார்.

குஜராத்தின் மிகவும் பழமையான மற்றும் அழகான நகரம் என சொல்லப்படும் துவாரகை எப்படி மூழ்கியது என்பதை பார்க்கலாம். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இந்த துவாரகையில் வாழ்ந்து ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நகரம் 3500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என சொல்கிறார்கள்.
தாய்மாமன் கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு துவாரகாவில் முடி சூடிக் கொண்டார் கிருஷ்ணன். கலி காலத்தின் போது கிருஷ்ணர் பூமியை விட்டு ஆன்மீக உலகிற்கு சென்றதால் இந்த நகரம் கடலில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி உருவானது அல்லவா அது போன்றதொரு கடல் சீற்றம் உருவாகி துவாரகை நகரம் மூழ்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தற்போதைய குஜராத்தின் துவாரகா நகரில் துவாரகாதீஷ் கோயில் அமைந்துள்ளது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. அரபிக் கடலில் மூழ்கிய துவாரகா நகரம் குறித்து 1930 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1960 ஆம் ஆண்டுக்கு பிறகு துவாரகா நகரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது 500 க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை கடலுக்கு அடியில் துவாரகா நகரம் குறித்து ஆய்வு நடத்தியது. அப்போது கடலுக்கு அடியில் கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப் பெரிய துறைமுகமாக துவாரகா இருந்ததை காட்டும் வகையில் நங்கூரங்களும் கிடைத்தன.

பிரம்மாண்ட சுவர், வட்ட வடிவிலான கற்கள், வெண்கலம், செம்பு, இரும்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்த போது சுமார் 7500 ஆண்டுகள் முதல் 9 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக் கூடும் என தெரிகிறது.
அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரை பார்வையிட சிறப்பு நீர் மூழ்கி கப்பலை தயாரிக்க மும்பையை சேர்ந்க மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் ஒபு்பந்தம் போடப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்த நீர் மூழ்கி கப்பலில் ஒரே நேரத்தில் 30 பேர் பயணம் செய்யலாம், 24 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் இரு மாலுமிகள், இரு நீச்சல் வீரர்கள், ஒரு வழிகாட்டி, ஒரு டெக்னீசியன் ஆகிய 6 பேர் பயணம் செய்வர்.

அந்த கப்பலில் அவசர கால தேவைக்கான மருந்துகள், ஆக்ஸிஜன் மாஸ்க், ஸ்கூபா உடைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கவசங்களும் நீர் மூழ்கி கப்பலில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும் அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளும் அமைக்கப்படும். கடலுக்கு அடியில் 300 அடி ஆழத்தில் இந்த நீர் மூழ்கி கப்பல் பயணம் செய்யும். கண்ணாடி ஜன்னல்கள் மூலம் துவாரகையின் அழகை மட்டும் அல்லாமல் கடல் வாழ் உயிரினங்களையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கிய துவாரகை நகரை பார்வையிடலாம்.
படங்கள்: Suchi Sharma என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications