2 பக்கம் இரும்பு பிளேட்! டெல்லியில் போலீஸ் தடுப்புகளை காலி செய்ய பொக்லைன் வாகனத்தை இறக்கிய விவசாயிகள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீண்டும் தங்கள் டெல்லி சலோ போராட்டத்தைத் தொடங்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

அதன்படி இரண்டு நாட்கள் போராட்டம் நடக்காமல் இருந்த நிலையில், இப்போது மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
விவசாயச் சங்கங்கள்: மூன்று வகையான பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை பழைய குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் வாங்கும் வகையில் மத்திய அரசு ஒரு ஐந்தாண்டு ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு முன்மொழிந்து இருந்தது. இந்த திட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை நிராகரிப்பதாக விவசாயச் சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து மீண்டும் டெல்லி ஷம்பு எல்லையில் தங்களின் 'டெல்லி சலோ' போராட்டத்திற்காக விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். நாளை பிப்ரவரி 21 முதல் மீண்டும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்த உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
#WATCH | Protesting farmers bring heavy machinery including hydraulic cranes and earth movers to Shambhu on the Punjab-Haryana border pic.twitter.com/brTIhOSgXE
— ANI (@ANI) February 20, 2024
பொக்லைன் இயந்திரம்: விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க எல்லையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ள நிலையில், அதை காலி செய்ய பொக்லைன் இயந்திரங்களை விவசாயிகள் டெல்லி எல்லைக்கு ஓட்டி வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் உள்ளிட்ட பலரும் அந்த பொக்லைன் இயந்திரத்தைப் பார்க்க அந்த இடத்தில் கூடுவதால், போராட்ட களம் ஒரு கண்காட்சி நடக்கும் இடத்தை போல மாறும் சூழல் உள்ளது.
போலீசார் விவசாயிகளை விரட்டி அடிக்க கண்ணீர்ப்புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தும் நிலையில், அதில் இருந்து தப்பிக்கவும் பொக்லைனில் உள்ள ஓட்டுநர் ரூமை தடிமனான இரும்பு தகடுகளை கொண்டு மூடியிருக்கிறார். மேலும், போலீசாரிடம் இருந்து தப்பும் வகையில் டிராக்டர்களிலும் கூட விவசாயிகள் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகள்: முன்னதாக விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், "மத்திய அரசு முன்வைத்த திட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்காது.. எனவே, போராட்டத்தைத் தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளைத் திசை திருப்பவும், நீர்த்துப் போகவும் மத்திய அரசு முயல்கிறது. ஆனால், அதெல்லாம் பலன் தராது. நாங்கள் கேட்பது ஒன்றுதான்.
சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள MSPக்கான 'C-2 பிளஸ் 50 சதவீதம்' ஃபார்முலாவைத் தவிர வேறு எதற்கும் விவசாயிகள் உடன்பட மாட்டார்கள். அதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் வரை போராட்டங்கள் தொடரும்" என்று அவர் அறிவித்தார்.
முன்னதாக விவசாயிகள் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, நித்யானநாத் ராய் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மத்திய அரசு சார்பில் கலந்து கொண்டனர். அப்போது மூன்று வகையான பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றைப் பழைய குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் வாங்கும் வகையில் மத்திய அரசு ஒரு ஐந்தாண்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு முன்மொழிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications