அமெரிக்காவுக்கும் நண்பன்.. ரஷ்யாவையும் கைக்குள் போட்ட இந்தியா.. வரலாறு காணாத அளவு எண்ணை இறக்குமதி
டெல்லி: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவை மட்டுமே அதிகம் நம்பி இருக்கிறது. இதற்கான காரணம் என்ன.. இந்த நிலைக்கு நாம் வந்தது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
உலகின் பல்வேறு நாடுகளும் ஒன்று அமெரிக்காவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும்.. அல்லது சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும். ஆனால், இந்தியா மட்டுமே இரு நாடுகள் உடனும் நல்லுறவை வைத்துள்ளது.

நமது நாடு சுதந்திரம் பெற்றது முதலே ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. 2000களில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவும் வலுவானது. இருப்பினும், இந்தியா அமெரிக்கா உறவு என்பது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் உறவைப் பாதிக்கவில்லை.
நல்லுறவு: இதன் காரணமாகவே உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. உலகின் பல்வேறு நாடுகளும் கூட ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் இந்தியா அதுபோல எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை. இதன் மூலம் இந்தியாவால் இரு முக்கிய நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு தரப்பிடமும் நல்லுறவை வைத்திருக்க முடிந்தது.
இதற்கிடையே ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது அக்டோபர் மாதத்தில் திடீரென உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கை நாம் இப்போது ரஷ்யாவில் இருந்து தான் வாங்குகிறோம்.
ரஷ்யாவில் இருந்து அதிகம்: ரஷ்யாவிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மதிப்பு $3.78 பில்லியனாக உயர்ந்துள்ளது.. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் $2.62 பில்லியனாக இருந்த நிலையில், இந்தாண்டு இறக்குமதி அதைக் காட்டிலும் 44% அதிகரித்துள்ளது. கடந்த செப். மாதம் முதலே ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓராண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் 9% வரை அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை நாம் நமது கச்சா எண்ணெய் தேவையை பெரும்பாலும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறோம். இந்த மாதத்திற்கான நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதி செலவு என்பது 12.43 பில்லியன் டாலராக இருக்கிறது. இது முந்தைய மாதத்தின் 10.42 பில்லியன் டாலரை காட்டிலும் அதிகமாகும்.
என்ன காரணம்: ரஷ்யா உக்ரைன் போருக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அவர்களிடம் கச்சா எண்ணெய் வாங்கவும் மறுத்தன. ஆனால் இந்த காலகட்டத்தில் தான் இந்தியா ரஷ்யாவில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.
மற்ற நாடுகள் வாங்க மறுத்ததால் இந்தியாவால் மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்க முடிந்தது. கடந்தாண்டு பேரல் ஒன்றுக்கு 30 டாலர் வரை டிஸ்கவுண்ட் கிடைத்த நிலையில், இந்தாண்டு அந்த சலுகை என்பது $5-6 டாலராக குறைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அடுத்துள்ள நாடுகள்: ரஷ்யாவுக்கு அடுத்து ஈராக் நாட்டில் இருந்து தான் நாம் அதிகம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். கடந்த அக். மாதம் $2.83 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட $2.64 பில்லியனில் இருந்து 7.18% அதிகமாகும்.
இந்த இரு நாடுகளைத் தவிர சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் நைஜீரியா நாடுகளிடம் இருந்தும் முறையே $1.72 பில்லியன், $1.23 பில்லியன் மற்றும் $7.76 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி 5.87% அதிகரித்துள்ளது. அதேநேரம் ஐக்கிய அமீரகம் மற்றும் நைஜீரியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி முறையே 27.94% மற்றும் 24.97% குறைந்துள்ளது. இது நாம் நமது கச்சா எண்ணெய் தேவைக்கு எந்தளவுக்கு ரஷ்யாவை சார்ந்து இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
மாறும் பிளான்: உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இதுநாள் வரை பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை எடுத்து வரச் செலவு அதிகம் ஆகும் என்பதால் அரிதாகவே ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்தது. ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு டிஸ்கவுண்ட் விலையில் கச்சா எண்ணெய் கிடைத்ததால் இந்தியா ரஷ்யாவில் இருந்து தனது கொள்முதலை அதிகப்படுத்தியது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications