Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுஷ்மான் பாரத் கார்டு பெற எப்படி அப்ளை செய்ய வேண்டும்? 70 வயதை தாண்டிய அனைவருக்கும் காப்பீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதைக் கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தனியாக சுமார் ரூ 5 லட்சம் காப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுமார் 4.5 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன.. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம்.

கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மிக முக்கியமான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY). சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

central govt

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாகக் கருதப்படும் இதில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 40% மக்கள் அதாவது 55 கோடி பேர் பயனடைவார்கள்.

எதற்காக: தேசிய சுகாதாரக் கொள்கை 2017இன் கீழ் அனைவருக்கும் மருத்துவ கவரேஜ் (UHC) இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா. ஏழை மக்களுக்குத் தேவையான சிகிச்சை சரியாகக் கிடைப்பதை இது உறுதி செய்கிறது.

இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் உறுதி செய்யப்படும். தொற்றாத நோய்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்படும். அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல் சேவைகளும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், மருத்துவமனையில் அனுமதியாகும் போது குடும்பத்திற்கு ஆண்டுதோறும் ₹ 5 லட்சம் வரையிலான காப்பீடும் கிடைக்கும்.

யாருக்குக் காப்பீடு கிடைக்கும்: இந்தத் திட்டத்தில் தகுதி பெற சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. எஸ்சி/ எஸ்டி பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள்.

கிராமப்புறத்தில் இருப்போரில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள், யாசகம் பெறுவோர், 16 முதல் 59 வயதுடைய நபர்கள் இல்லாத குடும்பங்கள், குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளியைக் கொண்ட குடும்பம், தினசரி வேலை செய்யும் நிலமற்ற குடும்பங்கள், பழங்குடி சமூகங்கள், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டோர், ஒற்றை அறை கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்கள் உள்ளிட்ட பிரிவினர் இதில் தகுதி பெறுவார்கள்

நகர்ப்புறத்தில் வாழ்பவர்களில் 2011 சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பில் தொழிலாளர் பிரிவில் வந்த குடும்பங்கள், ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (RSBY) திட்டத்தில் பதிவு செய்துள்ள குடும்பங்கள் இதில் தகுதி பெறும்.

செக் செய்வது எப்படி: நீங்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றவரா என்பதை ஆன்லைனிலேயே செக் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு Am I Eligible என்பதை கிளிக் செய்ய வேண்டும். மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை டைப் செய்து Generate OTP என்பதைக் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபியை பதிவிடுங்கள். அதில் தேவையான தகவல்களைக் கொடுத்து சம்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.

இதற்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும்: நோய் வாய்ப்பட்ட நபரை அருகே உள்ள PMJAY kioskக்கு அழைத்துச் செல்லவும். உங்கள் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டை ஆதாரமாக சமர்ப்பிக்கவும். நீங்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெறும் நபராக இருந்தால் அவர்களே AB-PMJAY ஐடியை தந்துவிடுவார்கள். அதை வைத்து நாம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+