கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
டெல்லி: கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது என்பதால் அவற்றை எப்படி பயன்படுத்துவது, அதில் பதிவு செய்ய என்னென்ன நடைமுறைகள் தேவை என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் இன்று முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் தளமான கோவின் செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்த செல்பேசி செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனாளிகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். இது தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார ஊழியர்களின் தரவுத்தளத்தையும் அரசு தயாரித்துள்ளது.

செயலி
தற்போதைய சூழலுக்கு இவற்றை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த முடியாது. அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போதுதான் அவரை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்யலாம். தடுப்பூசி செயல்முறையை எளிதாக்குவதற்காகவே மத்திய அரசு இந்த செயலியை உருவாக்கியுள்ளது.

புகைப்பட அடையாள அட்டை
இதன் பயன்பாடு முழுமையடைந்த பின்னரே பொதுமக்கள் பயன்படுத்த முடியும். முழுமை அடைந்த பிறகு இதில் பதிவு செய்ய மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். சுய பதிவு, தனிப்பட்ட பதிவு, தொகுப்புப் பதிவு. கோவின் செயலியில் பதிவு செய்ய புகைப்பட அடையாள அட்டை அவசியம்.

ஆவணங்கள்
சுய பதிவுக்காக பதிவு செய்வோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி பாஸ் புத்தகம். தபால் அலுவலக பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆதாரம் கடிதங்கள் உள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றை பதிவு செய்யலாம்.

கோவின் செயலி
இவற்றை கொண்டு இ-கேஒய்சி எனப்படும் பயனாளிகளை அறிந்து கொள்ளும் படிவத்தை பயனாளி நிரப்ப வேண்டும். கோவின் செயலியில் பதிவு செய்த பிறகு பயனாளியின் செல்பேசி எண்ணிற்கு கோவிட் 19 தடுப்பூசி போடப்படும் இடம், தேதி, நேரம் ஆகிய தகவல்கள் வரும்.கோவின் செயலியில் 5 வகை பதிவுதள் உள்ளன.

அமர்வுகள்
நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளியின் தொகுதி, அறிக்கை தொகுதி ஆகியவையாகும். இவற்றில் நிர்வாகி தொகுதி தடுப்பூசி அமர்வில் ஈடுபடுவோருக்கானது. பதிவு தொகுதி மூலம் பதிவுசெய்த நபர்களின் தகவல்களை நிர்வாகி பெறுவார். அதன்பிறகுஅவர்கள் அமர்வுகளை ஏற்பாடு செய்வார்கள், தடுப்பூசியை போடுவதற்கான தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகள் போன்ற தகவல்கள் பகிரப்படும்.

புதுப்பிக்கும் விவரம்
தடுப்பூசி தொகுதியில் கோவின் பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்து அவர்களின் தடுப்பூசி செயல்முறையை புதுப்பிக்கும் விவரம் பதிவாகும். பயனாளி தொகுதியில் தடுப்பூசி பெறுவோரின் விவரங்கள், தடுப்பூசி விவரங்கள் பதிவேற்றப்படும். அறிக்கை தொகுதியில் எத்தனை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது போன்ற விவரம் பதிவேற்றப்பட்டு பயனாளிகளுக்கு கியூ ஆர் ஸ்கேன் கோடு அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications