நான் இந்திரா காந்தியின் பேத்தி.. உண்மையை மக்களிடம் சொல்வேன்... உ.பி. அரசுக்கு பிரியங்கா எச்சரிக்கை
டெல்லி: பொதுமக்களிடம் உண்மையை பேசவிடாமல் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிறுமிகள் காப்பகம் ஒன்றில் கொரோனா கோரதாண்டவமாடி இருக்கிறது. அங்கு 57 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

7 சிறுமிகள் கர்ப்பம்
அத்துடன் 7 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும் மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஒருவருக்கு ஆட்கொல்லி நோயான எச்.ஐ.வி. இருப்பதும் உறுதியானது. ஆனால் சிறுமிகள் காப்பகத்துக்கு வரும்போதே கர்ப்பமாக இருந்தனர்; இதற்கு ஆதாரங்கள் உண்டு என்கிறது அரசு தரப்பு.

விமர்சித்த பிரியங்காவுக்கு நோட்டீஸ்
இச்சம்பவத்தை முன்வைத்து உத்தரப்பிரதேச ஆளும் பாஜக அரசை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதனடிப்படையில் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. பிரியங்கா காந்தி தமது பதிவை திருத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சிறுமிகள் விவகாரம் அரசியலாக விஸ்வரூபமெடுத்தது.

பிரியங்காவின் பதிலடி
இதற்கு தற்போது பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். தமது சமூக வலைதள பக்கங்களில் அடுத்தடுத்து இந்தி மொழியில் பிரியங்கா காந்தி பதிவிட்டு வருகிறார். அதில், என்னை பல்வேறு துறைகள் மூலம் அச்சுறுத்தலாம் என நினைக்கிறது உத்தரப்பிரதேச அரசு. இப்படியெல்லாம் நீங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்.

இந்திராவோட பேத்தி
நான் மக்களுக்கு சேவையாற்ற வந்திருக்கிறேன். மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டியது என் கடமை. நான் இந்திரா காந்தியின் பேத்தி. இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பயப்படாமல் உண்மையைத்தான் சொல்வேன். சிலரைப் போல அறிவிக்கப்படாத பாஜக செய்தித் தொடர்பாளர் நான் அல்ல என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியங்கா.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications