கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி
Recommended Video
டெல்லி: நிர்பயா கொலையாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை வாரண்ட் காரணமாக பெரிய மகிழ்ச்சி இல்லை என அவரின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார்.
மார்ச் 3ம் தேதி, காலை 6 மணிக்கு, நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இன்று வாரண்ட் பிறப்பித்தது.

முதலில் ஜனவரி 22ம் தேதியும், பிறகு பிப்ரவரி 1ம் தேதியும் என இருமுறை, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டு, சட்டப் போராட்டத்தை காரணம் காட்டி அவை தள்ளிப்போயுள்ளன. இம்முறை மூன்றாவது முறையாக நான்கு குற்றவாளிகளுக்கும், மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா தாய், ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் இன்று பேசுகையில் கூறியதாவது: மரண தண்டனை வாரண்ட் பிறப்பிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பதால், எனக்கு இதில் பெரிய மகிழ்ச்சி எதுவும் தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இறுதியாக அவர்களுக்கு மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதில் திருப்தி அடைகிறேன். குற்றவாளிகள் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குற்றவாளிகளில் மூன்று பேர், சட்டப் போராட்டம் அனைத்திலும் தோற்றுவிட்டனர். எனவே, இனியும் தாமதிக்க கூடாது என திகார் சிறை நிர்வாகம் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை, ஏற்றுக் கொண்டு, நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications