கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி
Recommended Video
டெல்லி: நிர்பயா கொலையாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை வாரண்ட் காரணமாக பெரிய மகிழ்ச்சி இல்லை என அவரின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார்.
மார்ச் 3ம் தேதி, காலை 6 மணிக்கு, நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இன்று வாரண்ட் பிறப்பித்தது.

முதலில் ஜனவரி 22ம் தேதியும், பிறகு பிப்ரவரி 1ம் தேதியும் என இருமுறை, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டு, சட்டப் போராட்டத்தை காரணம் காட்டி அவை தள்ளிப்போயுள்ளன. இம்முறை மூன்றாவது முறையாக நான்கு குற்றவாளிகளுக்கும், மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா தாய், ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் இன்று பேசுகையில் கூறியதாவது: மரண தண்டனை வாரண்ட் பிறப்பிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பதால், எனக்கு இதில் பெரிய மகிழ்ச்சி எதுவும் தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இறுதியாக அவர்களுக்கு மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதில் திருப்தி அடைகிறேன். குற்றவாளிகள் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குற்றவாளிகளில் மூன்று பேர், சட்டப் போராட்டம் அனைத்திலும் தோற்றுவிட்டனர். எனவே, இனியும் தாமதிக்க கூடாது என திகார் சிறை நிர்வாகம் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை, ஏற்றுக் கொண்டு, நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications