பதவியேற்ற மறுநாளே ஷாக் கொடுத்த சுரேஷ் கோபி.. மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்.. பரபர பேட்டி
டெல்லி: கேரள மாநிலத்தில் முதல் முறையாக பாஜகவை காலூன்ற வைத்த நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். என்னை பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் பாஜக ஒரே ஒரு இடம் மட்டுமே வெற்றி பெற்றது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். கேரள மாநிலத்தில் பாஜக வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு பரிசளிக்கும் விதமாக சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை பாஜக தலைமை அளித்தது.

எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதுமே சுரேஷ் கோபி தனக்கு அமைச்சர் பதவியில் நாட்டம் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபியும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுரேஷ் கோபி தனக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி கூறுகையில், "மத்திய அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம். சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்.
அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன். ஆனால், பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை. திருச்சூர் தொகுதி மக்களுக்காக ஒரு எம்.பியாக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றார்.
கேரளாவி முதல் முறை கால் பதித்த பாஜக: கேரளாவில் 1957 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல்களில் 2024க்கு முன்பு வரை பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் முதல் முறையாக 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்.
அதேபோல அவருக்கு மத்திய அமைச்சராவையிலும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. திருச்சூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளரை 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி தோற்கடித்திருக்கிறார். இந்த வெற்றி மூலம் முதல் முறையாக பாஜக கேரளாவில் காலூன்றியிருக்கிறது. இதற்கு பரிசாகவே சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications