வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் அபிநந்தன்?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் அபிநந்தன்
டெல்லி: இந்தியா பாகிஸ்தானின் நாடுகளின் எல்லையான வாகாவில் வைத்து நாளை இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் அதிகாரிகளால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் தொடர் அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ள, பாகிஸ்தான், தான் பிடித்து வைத்திருந்த இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளால் விங் கமாண்டர் அபிநந்தன் கூட்டி வரப்பட்டு நாளை மதியம், வாகா எல்லையில் வைத்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்புக்குக் ஒட்டுமொத்த நாடாளுமன்ற எம்பிக்களும் மேஜையை தட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications