தடுப்பூசியே வந்தாலும் முககவசம் நம்மை விட்டு ஒரு போதும் போகாது.. ஐசிஎம்ஆர் தலைவர் பேச்சு
டெல்லி: தடுப்பூசி கிடைத்தாலும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு சுகாதார முன்னெச்சரிக்கைகளை நீண்ட காலம் இருக்கும், எனவே கட்டாயம் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைமை பேராசிரியர் பால்ராம் பார்கவா தெரிவித்தார்.
ஐ.சி.எம்.ஆர் தலைமை பேராசிரியர் பால்ராம் பார்கவா, லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 'கோவிட் -19 நிர்வாகத்தில் மாற்றங்களை மாற்றியமைத்தல்' என்ற தலைப்பில் ஒரு வெபினாரில் பேசினார். அப்போது அவர், தடுப்பூசி வளர்ச்சியில் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்து வருகிறது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு உள்ளது. அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும். இந்தியா கொரோனா தடுப்பூசியை உருவாக்கும், அது தனக்கு மட்டுமல்ல, வளரும் நாடுகளுக்கும் தான். கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இருபத்தி நான்கு உற்பத்தி பிரிவுகளும் 19 நிறுவனங்களும் ஈடுபடுகின்றன.
தடுப்பூசிக்கு நிகராக முககவசம் வேலை செய்கிறது. தடுப்பூசி உருவாக்கப்பட்ட பின்னரும் முககவசம் அணிய வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முககவசம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கொரோனா பரவுவதை தடுப்பதில் முககவசம் முக்கிய பங்கு வகிப்பதை புறக்கணிக்க முடியாது. கொரோனாவை வெல்ல தடுப்பூசியை பயன்படுத்த உள்ளோம். இந்தியாவில் ஐந்து தடுப்பூசி மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இவற்றில் இரண்டை இந்தியா உருவாக்கி வருகிறது, அதில் மூன்று வெளிநாட்டிலிருந்து வந்தவை. ஆனால் கொரோனாவை தடுக்க போதுமானதாக இருக்காது. சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications