Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் கார்டு .. இதை செய்யாட்டி உங்க அக்கவுண்டே கேன்சல் ஆகிடும்.. உடனே செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அஞ்சல்துறையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் சேமிப்பு கணக்கு முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எல்லா அரசு துறைகளுமே ஆதார் கார்டை கட்டாயம் ஆக்கி உள்ளன. பிறப்பது தொடங்கி, பள்ளியில் சேர்ப்பது, கல்வி உதவி தொகை பெறுவது, ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, ரேஷன் கார்டில் பெயரை நீக்க, கல்லூரிகளில் சேர, கல்லூரிகளில் படித்து முடித்து வேலைக்கு சேரவும், வங்கிகளில் கணக்கு துவங்கவும், திருமணத்தை பதியவும், சொத்துக்களை பதியவும், சொத்துக்களை விற்பனை செய்யவும், வருமான வரி கட்டவும் ஆதார் கார்டு கட்டாயம் ஆகி உள்ளது.

If Aadhaar card is not linked by September 30, your postal savings account will be deactivated

இதுதவிர முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, அரசு தரும் உரமானியம், விவசாயிகளுக்கான உதவி தொகை திட்டங்கள், இன்சூரன்ஸ், சேமிப்பு கணக்கு என எல்லாவற்றுக்குமே ஆதார் கார்டு வேண்டும். ஏன் ஒருவர் இறந்துவிட்டார் என்றால், அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கவும் ஆதார் கார்டு வேண்டும். ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது.

ஆதார் கார்டு இல்லாமல் மத்திய அரசு அல்லது மாநில அரசின் எந்த திட்டங்களையும் நன்மையையும் பெற முடியாது. இந்தசூழலில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார் எண்ணை தங்கள் சேமிப்பு கணக்குகளுடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்த நிலையில், அதற்கு 6 மாதம் காலஅவகாசம் வழங்கி இருந்தது.

அதன்படி, ஏப்ரல் 1 ஆரம்பித்த அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி முடிகிறது. எனவே தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது. மீண்டும் மத்திய அரசு அவகாசம் வழங்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே அவகாசம் முடிவதற்குள் ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+