மிரட்டும் பைபர்ஜாய் புயல்.. ரயில்சேவை ரத்து செய்யப்படுமா? பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
டெல்லி: பைபர்ஜாய் புயல் கரையக் கடக்கும் போது மணிக்கு 50 கி. மீட்டருக்கு மேல் காற்று வீசினால் ரயில்கள் நிறுத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பைபர்ஜாய் புயல் வரும் 15 ஆம் தேதி கரையக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல் வரும் 15 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பைபர்ஜாய் நேற்று வடக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08:30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் போர்பந்தருக்கு தென்மேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த புயல் நாளை மறுநாள் காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு - வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சவுராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி நண்பகல், மிக தீவிர புயலாக, குஜராத்தில் உள்ள மாண்டிவி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே, ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்கக்கூடும் எனவும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தென்மேற்கு பருவமழை சீசனில் உருவான முதல் புயல் பைபர்ஜாய் புயல். இந்த புயலுக்கு வங்கதேசம் வைத்துள்ள பெயர் வைக்கப்பட்டுள்ளது. பைபர்ஜாய் என்றால் வங்கத்தில் பேரழிவு என்பது பொருளாகும். புயல் காரணமாக மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க சென்றிருந்தால் அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பைபர்ஜாய் புயல் காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 50 கி.மீக்கு மேல் காற்றின் வேகம் இருந்தால் ரயில்களை ஒழுங்குப்படுத்த அல்லது நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டிருப்பதாவது:-

அதிதீவிர நிலையில் உள்ள 'பைபர்ஜாய்' புயல் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாவ்நகர், மஹுவா, வெராவல் முதல் போர்பந்தர் பகுதி, ஓகா முதல் ஹாபா வரை மற்றும் காந்திதாம் பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன.
காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ மேல் இருந்தால் ரயில்களை ஒழுங்குபடுத்த அல்லது நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அனிமோமீட்டர்கள் பொருத்தப்பட்டு, காற்றின் வேகம் கணக்கிடப்பட்டு வருகிறது. பயணிகள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அருகில் உள்ள ரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications