விண்ணப்பிக்காமலேயே முதியோர் உதவித்தொகை.. 60 வயதை கடந்தவர்களுக்கு குட்நியூஸ்.. உபியில் திட்டம்
டெல்லி: இன்றைக்கு முதியோர் உதவித்தொகை பெற கலெக்டர் ஆபீஸ்களில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் மனு அளிப்பார்கள். பல்வேறு வழிகளில் உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பார்கள். ஆனால் அவர்களில் பலர் எத்தனை முறை நடந்தாலும் முதியோர் உதவி தொகை கிடைக்காது. இதுதான் காலம் காலமாக பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யா நாத் தலைமையிலான அரசு, 60 வயதை அடைந்தவுடன் முதியோர் ஓய்வூதியம் தானாக கிடைக்கும் திட்டத்தை கொண்டுவருகிறது. இதுபற்றி பார்ப்போம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோடிக்கணக்கான மூத்த குடிமக்கள் இனி முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு எந்த அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ, நீண்ட வரிசைகளில் நிற்கவோ அல்லது எந்தப் படிவங்களையும் நிரப்பவோ தேவையில்லை என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதியோர் ஓய்வூதியத்தை ரேஷன் கார்டுடன் இணைக்க யோகி தலைமையிலான அரசு அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இந்த புரட்சிகரமான முடிவால், 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியம் முதியவர்களின் வங்கிக் கணக்கில் எவ்வாறு தானாகவே செலுத்தப்படும் மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும்.
முதியோர் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை
உத்தரப் பிரதேச அரசு மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் விதமாக மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோருக்குக் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியம் இப்போது அவர்களின் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கொள்கை முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேச அரசின் இந்த முடிவு காரணமாக, அம்மாநிலத்தில் மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற எந்த விண்ணப்பப் படிவங்களையும் நிரப்ப தேவையில்லை. தற்போது வரை ஓய்வூதியத்தைத் தொடங்குவதற்காக அரசு அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியிருந்தது. அப்படி அலைந்த கோடிக்கணக்கான முதியோர்களுக்கு இந்த முடிவு மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்திருக்கும்.
ஓய்வூதியம் தானாகவே பட்டுவாடா செய்யப்படும்
உத்தரப்பிரதேச அரசின் புதிய திட்டம் எப்படி என்றால், முழுமையாகத் தானியங்குமயமாக்கப்பட்டிருக்கும். மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். முன்பெல்லாம், மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து, அதிகமான ஆவணப் பணிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது, ஆனால் இனி அப்படி இருக்காது. இந்தத் தானியங்கு பட்டுவாடா முறையில், ரேஷன கார்டில் பதிவு ய்யப்பட்ட வயதின் அடிப்படையில், 60 வயதை எட்டியவுடன் ஓய்வூதியம் தானாகவே மாதம் மாதம் வழங்கப்படும்.
குடும்ப அட்டை போதும்
குடும்ப அட்டையில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் 60 வயதை எட்டியவுடன் ஓய்வூதியம் தானாகவே தொடங்கும் என்று அமைச்சர் சூரத் கார்க் இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமும் தெரிவித்தார். ஓய்வூதியம், நேரடிப் பலன் பரிமாற்றம் மூலம் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவைப்படும். இந்த முறையால் ஓய்வூதியப் பட்டுவாடா விரைவாக முதியவர்களுக்கு கிடைத்துவிடும். இவருக்கு கிடைக்கும், இவர் அரசியல்வாதியின் சிபாரிசு என்றெல்லாம் பார்க்கப்படாது.60வயது நிறைவு பெற்ற ஏழைகளுக்கு எளிதாக கிடைக்கும்.
இப்போது என்ன சிஸ்டம்
தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு விண்ணப்பத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ₹1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த புதிய அமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, இந்த முழு விண்ணப்ப முறையும் நீக்கப்படும்., முழு செயல்முறையும் ஆட்டோமெட்டிக் சிஸ்டத்தில் வந்துவிடும். இந்த முக்கிய சீர்திருத்தத்தை செயல்படுத்துவதற்காக உத்தரப்பிரதேச அரசு கூடுதலாக ₹990 கோடி செலவிட முடிவு செய்துள்ளது.
கோடிக்கணக்கான முதியோருக்கு உரிய நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த சீர்திருத்தத்தின் நோக்கம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முதியார் உதவி தொகை சீர்திருத்தம் நேரத்தைச் சேமிப்பது மட்டுமல்லாமல், ஆவணப் பணிகளிலும், அரசு அலுவலகங்களுக்கு அலைவதிலும் சிரமங்களை எதிர்கொண்ட முதியோருக்குப் பெரிய நிவாரணத்தையும் அளிக்கும் என்று உத்தரப்பிரதேச அரசு நம்புகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications