Tauktae குஜராத் சவுராஷ்டிராவில் கரையை கடந்த டவ் தே புயல்
டெல்லி: குஜராத் மாநிலத்தில் கரையை கடந்த அதி தீவிர டவ்-தே புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் நள்ளிரவில் குஜராத் அருகே கரையை கடந்தது. மிக தீவிர புயலாக மாறிய இந்த டவ் டே குஜராத் கடற்கரை நெருங்கிய போது வீசிய பயங்கர காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
உள்ளூர் ரயில் சேவைகள் இயங்கவில்லை. குஜராத்தில் மிக அதிக கனமழையை கொடுக்கும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 200 கி.மீ. வேகம் வரை இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா அருகே டவ் தே புயல் முற்றிலுமாக கரையை கடந்தது. அதி தீவிர டவ்-தே புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்த டையு-க்கு 30 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.