வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் நீட்டிப்பு! - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக மத்திய அரசு 2020-21 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை டிச. 31, 2021க்கு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் இப்போது கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா பரவல் காரணமாகப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டும் ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டும், கடைசி நாள் மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 2021-22 ஆண்டிற்கான Income Tax Return தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் மார்ச் 15, 2022 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தவிர, வேறு சில கணக்கு தணிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கடந்த டிசம்பர் 31இல் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications