Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோமியத்துக்கு 50% கூட ஜிஎஸ்டி போடுங்க.. பால், தயிருக்கு ஏன்? -லோக்சபாவில் திமுக எம்பி செந்தில்குமார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோமியத்துக்கான ஜிஎஸ்டியை 50% கூட உயர்த்திக்கொள்ளுமாறும் குழந்தைகள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், தயிருக்கான ஜிஎஸ்டியை குறைக்குமாறும் லோக்சபாவில் திமுக எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

எம்பிக்கள் சஸ்பெண்ட்

எம்பிக்கள் சஸ்பெண்ட்

பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி. வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

பால், தயிருக்கு ஜிஎஸ்டி

பால், தயிருக்கு ஜிஎஸ்டி

இந்த கூட்டத்தில் பேசிய தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், ஜி.எஸ்.டி. வரி உயர்வை கடுமையாக விமர்சித்தார். "நரேந்திர மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறது. பால், தயிர், உருளைக் கிழங்குகளின் விலையை உயர்த்தப்பட்டு வருகிறது. பேக்கேஜிங் செய்யப்பட்ட பாலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. பேக்கேஜிங் செய்யப்படாத பாலுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்கிறார்கள்.

கோமியம்

கோமியம்

குழந்தைகள், பொதுமக்கள் பேக்கேஜிங் செய்யப்பட்ட பால் மற்றும் தயிரையே வாங்க விரும்புவார்கள். ஏனென்றால் அதுவே பாதுகாப்பானது. மத்திய அரசு வேண்டுமால் ஒரு பொருளுக்கு 50% கூட ஜிஎஸ்டி வரியை உயர்த்திக்கொள்ளட்டும். அதுதான் கோமியம். ஏன் சாதாரண மக்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். தேர்தல் வந்தால் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதில்லை. தேர்தல் முடிந்தால் மீண்டும் உயர்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+