கோமியத்துக்கு 50% கூட ஜிஎஸ்டி போடுங்க.. பால், தயிருக்கு ஏன்? -லோக்சபாவில் திமுக எம்பி செந்தில்குமார்
டெல்லி: கோமியத்துக்கான ஜிஎஸ்டியை 50% கூட உயர்த்திக்கொள்ளுமாறும் குழந்தைகள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், தயிருக்கான ஜிஎஸ்டியை குறைக்குமாறும் லோக்சபாவில் திமுக எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

எம்பிக்கள் சஸ்பெண்ட்
பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வு
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி. வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

பால், தயிருக்கு ஜிஎஸ்டி
இந்த கூட்டத்தில் பேசிய தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், ஜி.எஸ்.டி. வரி உயர்வை கடுமையாக விமர்சித்தார். "நரேந்திர மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறது. பால், தயிர், உருளைக் கிழங்குகளின் விலையை உயர்த்தப்பட்டு வருகிறது. பேக்கேஜிங் செய்யப்பட்ட பாலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. பேக்கேஜிங் செய்யப்படாத பாலுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்கிறார்கள்.

கோமியம்
குழந்தைகள், பொதுமக்கள் பேக்கேஜிங் செய்யப்பட்ட பால் மற்றும் தயிரையே வாங்க விரும்புவார்கள். ஏனென்றால் அதுவே பாதுகாப்பானது. மத்திய அரசு வேண்டுமால் ஒரு பொருளுக்கு 50% கூட ஜிஎஸ்டி வரியை உயர்த்திக்கொள்ளட்டும். அதுதான் கோமியம். ஏன் சாதாரண மக்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். தேர்தல் வந்தால் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதில்லை. தேர்தல் முடிந்தால் மீண்டும் உயர்கிறது.
-
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
ரஞ்சனா நாச்சியார் காட்டிய ஒயிட் பேப்பர்.. விஜயை அலற விட்டவர் திமுகவில் இணைகிறாரா? லக்கி ராமநாதபுரம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்?












Click it and Unblock the Notifications