முப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. மத்திய அரசு அதிரடி முடிவு.. பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு!
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின் செங்கோட்டையில் பேசிய மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.

என்ன தீவிரவாதம்
பிரதமர் மோடி தனது பேச்சில், தீவிரவாதத்திற்கு எதிராக நாம் கடுமையாக செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு தற்போது முக்கிய பிரச்சனையாகி உள்ளது. தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்த நாடுகளை நாம் அம்பலப்படுத்தி உள்ளோம். உலக நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் பக்கம் நிற்கிறது.

ஆதரவு
தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்திற்கு எதிராக நாம் இனியும் அமைதியாக இருக்க முடியாது. வங்கதேசம், சீனா , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கூட தீவிரவாத தாக்குதல் நடந்தது. நாம் அதை எல்லாம் கண்டித்து இருக்கிறோம்.

முப்படை தளபதி
முப்படைக்கும் இனி ஒரே தலைவர் இருப்பார். தரைப்படை, விமானப்படை, கடற்படை மூன்றுக்கும் இனி ஒரே தலைமை இருக்கும். இதற்கு முன் முப்படைகளுக்கு தனி தனி தலைவர்கள் இருந்தனர் . இனி அது போல இருக்காது.

எப்படி
முப்படைக்கு ஒரே தலைமை பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவார். இந்த கோரிக்கை பல நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. இப்போது நாம் அதை நிறைவேற்றி இருக்கிறோம். இதனால் நமது பாதுகாப்பு இன்னும் பலமடையும் என்றுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications