ஒரே நாடு ஒரே தேர்தல்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணம் மிச்சம் ஆகும், இதுகுறித்த விவாதத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணம் மிச்சம் ஆகும், இதுகுறித்த விவாதத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி ஆறாவது முறையாக டெல்லியில் கொடி ஏற்றியுள்ளார் .

ஜிஎஸ்டி என்ன
தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், ஜிஎஸ்டி மூலம் நாடு முழுக்க ஒரே வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து இருக்கிறது. இதன் மக்கள் சரியாக வரி கட்ட முடிகிறது. நாட்டிற்கு இதனால் அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி பெரிய வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

ஒரே நாடு ஒரே திட்டம்
ஒரே நாடு ஒரே திட்டம் என்றால் இப்படித்தான் நன்மைகள் நடக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலும் இப்படித்தான். மக்களின் வரிப்பணம் இதன் மூலம் சேமிக்கப்படும். இதுகுறித்த விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த விவாதங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும். இதில் விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்.

சுதந்திரம் ஏன்
மக்களுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளிக்க போகிறது. அவர்களின் வாழ்க்கையில் நாங்கள் இனி தலையிட மாட்டோம். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தலையிட கூடாது. மக்களுக்கு தங்களு தேவையானதை அவர்களே நிறைவேற்றிக்கொள்வார்கள்.

1,450 சட்டங்களை நீக்கியது
கடந்த 5 வருடத்தில் 1,450 சட்டங்களை நீக்கியுள்ளோம். மக்களின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை நீக்கி இருக்கிறோம். மக்கள் எளிமையாக வாழ வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். ஆனால் மக்களுக்கு நாங்கள் தேவை என்றால் உடனே அந்த இடத்தில் வந்து நிற்போம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications