Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா vs பாகிஸ்தான்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றம்.. யாரிடம் எவ்வளவு அணு ஆயுதம் உள்ளது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையில் நாளுக்கு நாள் அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை வழக்கமாக்கி வரும் சூழலில், இந்தியா முறையான பதிலடியை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4வது நாளாக போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய படைகள் பாகிஸ்தானில் உள்ள விமானப் படை தளங்களை தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இதனால் 3 விமானப் படை தளங்கள் சேதமடைந்துள்ளன.

India and Pakistan both have nuclear weapons and India Control 172 Pakistan Controls 170

பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமான தளம், முரித் விமான தளம் மற்றும் ரஃபிகி விமான தளம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையில் அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவசரமாக அணு சக்தி கட்டளை அமைப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைப் பகுதியை நெருங்கி வருவதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை, இந்தியா முன்னெச்சரிக்கையுடன் முறியடித்து வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக பிபிசி செய்தியின் அடிப்படையில், அணு ஆயுதங்களை பொறுத்தவரை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு அறிவுசார் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருக்கின்றன.

ஆனாலும் இரு நாடுகளும் எத்தனை அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளன என்பது இதுவரை தெளிவாக இல்லை. முதல்முறையாக இந்தியா 1998ஆம் ஆண்டு ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் 5 அணு ஆயுத சோதனைகளை இந்தியா நடத்தியது. அதேபோல் பாகிஸ்தானை பொறுத்தவரை 1998ஆம் ஆண்டு சாகை 1 என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+