இந்தியா vs பாகிஸ்தான்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றம்.. யாரிடம் எவ்வளவு அணு ஆயுதம் உள்ளது?
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையில் நாளுக்கு நாள் அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை வழக்கமாக்கி வரும் சூழலில், இந்தியா முறையான பதிலடியை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4வது நாளாக போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய படைகள் பாகிஸ்தானில் உள்ள விமானப் படை தளங்களை தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இதனால் 3 விமானப் படை தளங்கள் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமான தளம், முரித் விமான தளம் மற்றும் ரஃபிகி விமான தளம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையில் அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவசரமாக அணு சக்தி கட்டளை அமைப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைப் பகுதியை நெருங்கி வருவதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை, இந்தியா முன்னெச்சரிக்கையுடன் முறியடித்து வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக பிபிசி செய்தியின் அடிப்படையில், அணு ஆயுதங்களை பொறுத்தவரை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு அறிவுசார் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருக்கின்றன.
ஆனாலும் இரு நாடுகளும் எத்தனை அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளன என்பது இதுவரை தெளிவாக இல்லை. முதல்முறையாக இந்தியா 1998ஆம் ஆண்டு ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் 5 அணு ஆயுத சோதனைகளை இந்தியா நடத்தியது. அதேபோல் பாகிஸ்தானை பொறுத்தவரை 1998ஆம் ஆண்டு சாகை 1 என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications