விவசாயிகள் போராட்டத்தை தூண்டுகிறதாம்.. 1178 டுவிட்டர் அக்கவுண்ட்களை முடக்க மத்திய அரசு பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, 1178 டுவிட்டர் அக்கவுண்டுகளை முடக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இவை, பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள அக்கவுண்டுகள் என அரசு குற்றம்சாட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக டுவிட்டர் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

India asks Twitter to remove 1178 more accounts over farmer protest

குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தவறாக ட்வீட் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பட்டியல் பிப்ரவரி 4ம் தேதி ட்விட்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை ட்வீட் செய்வதன் மூலம் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் பல தானியங்கி வகை போட்களாக இருக்கின்றன, அவை விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களில் தவறான தகவல் மற்றும் கோபப்படுத்தும் விஷயங்களை ஷேர் செய்கின்றன.

ட்விட்டர் நிறுவனம் இந்த அக்கவுண்டுகளுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி இந்தியாவில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை தெளிவாக அறிந்திருக்கிறார், விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த பாடகி ரிகானா ட்வீட்டுக்கு, அவர் லைக் கொடுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+