2வது நாளாக தொடரும் முழு அடைப்பு போராட்டம்.. பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
மத்திய பாஜக அரசை கண்டித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video

டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
நேற்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடக்க உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தமிழகத்தில் இந்த போராட்டம் காரணமாக பெரிய பாதிப்பு இல்லை. தமிழக எல்லை பகுதியில் மட்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இரண்டு நாள் போராட்டம்
பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மிக மோசமான திட்டங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடக்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழிற்சாலைகள் பாதித்தது. பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்கும் கொள்கைகளை மத்திய அரசு வகுக்காதது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது, தொழில் தொடங்க ஏற்ற சட்டங்களை கொண்டு வராதது என்று பல காரணங்களால் இந்த போராட்டம் நடக்கிறது.

நேற்று தொடங்கியது
நேற்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடக்க உள்ளது. போராட்டம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க இருக்கும் விவசாயிகள் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. 10க்கும் மேற்பட்ட அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடக்கிறது.

யார் காரணம்
அகில இந்திய தொழிலாளர் சங்கம் மூலம் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்றே இந்த போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் கடைகள் மூடப்பட்டது. பேருந்துகள், ஆட்டோக்கள் நேற்று இயங்கவில்லை.

இன்றும் நடக்கிறது
இந்த போராட்டம் இன்று முழு வடிவம் பெற்று முடிவடையும் என்கிறார்கள். மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இன்று நடக்கும் போராட்டத்தை நடத்துவார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications