உலகிலேயே ஒரே நாளில் அதிக பலி, அதிக பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலை முந்தி இந்தியா முதலிடம்
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 70,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 918 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அமெரிக்கா மற்றும் பிரேசிலை ஒப்பிடும்போது பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகமாக உள்ளது
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,32,72,847 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 8,05,907 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1.48 கோடி பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 1,76,070 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 707 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இன்று அதிகாலை நிலவலப்படி ஒரே நாளில் 34,020 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. தட்டையாகாத 'கிராப்..' சோதனைகள் அதிகரிப்புதான் ஆறுதல்
பிரேசிலில் ஒரே நாளில் புதிதாக 50,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114,250 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் சனிக்கிழமை ஒரே நாளில் 892 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் 30.43 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுளளனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 56,846 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 22,79,900 பேர் குணம் அடைந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் 7,06,138 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 918 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 70,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே ஒரே நாளில் உயிரிழப்பு, மற்றும் பாதிப்பு இந்தியாவில் தான் அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை இந்தியா முந்தியுள்ளது.