இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிப்பு- ஒரு நாள் பாதிப்பு 50,000-த்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 50,000-த்தை தாண்டும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலையில் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 8-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று இரவு 7 மணி வரையிலான மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்: மகாராஷ்டிரா 18,466; டெல்லி 5.481; மேற்கு வங்கம் 9,073; கர்நாடகா 2,479; தமிழகம் 2,731; குஜராத் 2,265; ராஜஸ்தான் 1,137; ஆந்திரா 334; பீகார் 893; ஒடிஷா 680; ஹிமாச்சல பிரதேசம் 260; கேரளா 3,640; பஞ்சாப் 1,027; கோவா 592; தெலுங்கானா 1,052
நாட்டில் நேற்று இரவு 7 மணி வரை மொத்தம் 87 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications