வெனிசுலாவில் சிக்கிய இந்தியர்கள்.! அமெரிக்கா இறங்கி 24 மணி நேரமாச்சு.. மத்திய அரசு முக்கிய கருத்து
டெல்லி: வெனிசுலாவில் அமெரிக்கா இறங்கித் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் அதிபரை நாடுகடத்தியது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே வெனிசுலாவில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், வெனிசுலாவில் வாழும் இந்தியர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தில் இருக்கும் குட்டி நாடு வெனிசுலா. இந்த நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் நேற்றைய தினம் திடீரெனத் தாக்குதல் நடத்தியது. டிரம்ப் உத்தரவின்படி நடந்த இந்தத் தாக்குதலில் வெனிசுலா தலைநகர் கராகஸில் இருந்து அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சீலியா ஃபுளோரசும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா கருத்து
வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டனர். நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் மீதான வழக்கு நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. வெனிசுலா மீது அமெரிக்கா நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், இன்று இந்தியா இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறது.
தேவையான உதவிகள்
வெனிசுலாவில் நிலவும் சூழல் கவலையளிப்பதாகவும், அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் எப்போதும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், வெனிசுலாவில் இருக்கும் இந்தியர்களை அங்குள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..
டிரம்ப் தாக்குதல்
வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா பல மாதங்களாகத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியது. அங்கு மதுரோ ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மதுரோவின் 12 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுகட்டிய அமெரிக்கா, அவரை போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்காகக் கைது செய்து அமெரிக்காவில் நாடுகடத்தியது. அவர் இப்போது நியூயார்க்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்களில் துணி கட்டப்பட்டு கரிபியன் கடற்படைக் கப்பலில் இருந்த புகைப்படத்தை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டார். மதுரோவை கைது செய்யும் அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கையைத் தனது மார்-எ-லாகோ எஸ்டேட்டில் இருந்தபடியே டிவி நிகழ்ச்சியைப் போல நேரலையில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்து யார்?
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும் 2025ல் நோபல் அமைதி விருது பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையை வரவேற்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார். வெனிசுலா நாட்டிற்குச் சுதந்திரம் பெறும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டார். பல ஆண்டுகளாகவே மதுரோவுக்கு எதிராகச் செயல்பட்டு வருபவர் மச்சாடோ, 2024 வெனிசுலா தேர்தலில் மதுரோவுக்கு எதிராகப் போட்டியிட்ட எட்முண்டோ கோன்சாலஸ் அதிபராகப் பதவியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிலர் மச்சாடோவே வெனிசுலாவின் அதிபராகப் பதவியேற்று, வழிநடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்கு வாய்ப்பில்லை என்று நிராகரித்தார். மச்சாடோவுக்கு வெனிசுலாவில் போதிய ஆதரவோ மரியாதையோ இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
-
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications