இலங்கை: இந்தியாவின் ரூ. 8,265 கோடி கடன் உதவி திட்டம் - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!
டெல்லி: இலங்கைக்கான இந்தியாவின் ரூ. 8,265 கோடி கடன் உதவி திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறது. இதனால் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகவும் நேரிட்டது.

முதலில் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே. அவர் இலங்கையைவிட்டு தப்பி ஓடி மீண்டும் நாடு திரும்பினார். அவரைத் தொடர்ந்து இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே, அந்நாட்டைவிட்டு தப்பி ஓடினார். ஒவ்வொரு நாடாக கோத்தபாய ராஜபக்சே அடைக்கலம் கோரினார். ஆனால் எந்த ஒரு நாடும் கோத்தபாய ராஜபக்சேவும் அடைக்கலம் தர முன்வரவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கே திரும்பினார் கோத்தபாய. இலங்கையில் தற்போது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இலங்கையை பொருளாதார பேரழிவியில் இருந்து மீட்க இந்தியா ஏராளமான நிதி உதவி வழங்கி உள்ளது. இலங்கைக்கு இந்தியா தற்போது வரை சுமார் ரூ. 32,000 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. இலங்கைக்கான அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், எரிபொருட்கள் கொள்முதல் செய்வதற்காக இந்த கடனுதவியை இந்தியா வழங்கி இருக்கிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்வதற்கும் இந்தியா சான்றிதழ்களை வழங்கியது.

இந்நிலையில் இலங்கைக்கான ரூ. 32,000 கோடி கடன் உதவியில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ. 8,265 கோடி கடன் தொகையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ரூ. 8,265 கோடி கடனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்கை திருப்பிச் செலுத்தலாம்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications