ஹுவாவே முதல் அலிபாபா வரை.. சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு.. கட்டம் கட்டிய இந்தியா.. ஆக்சன்!
டெல்லி: சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை கவனிக்க தொடங்கி உள்ளது.
சீனாவுடன் சண்டை நிலவி வரும் நிலையில் இந்தியாவில் சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள்.
டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கவனிக்கிறது
சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை கவனிக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனாவின் பிஎல்ஏ எனப்படும் (People's Liberation Army -PLA) ராணுவத்துடன் தொடர்பு உள்ளதாக இந்த நிறுவனங்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இவர்கள் ராணுவத்துடன் தொடர்பில் உள்ளனர்.

ராணுவம் எப்படி
சீனாவை சேர்ந்த ஹுவாவே, அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்கள் மீது இதற்கான புகார் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7நிறுவனங்கள் இந்த புகாரில் சிக்கி இருக்கிறது. ஹுவாவே, அலிபாபா, டென்சென்ட், எஸ்ஏஐசி, சிந்தியா ஸ்டீல்ஸ், சிங்சிங் கேத்தி இன்டர்நேஷன், சீனா எலக்ட்ரானிக் டெக்னலாஜி குருப் ஆகிய நிறுவனங்கள் மீது இந்த குறி வைக்கப்பட்டு உள்ளது.

தொடர்பு
சீனாவின் ராணுவத்துடன் இவர்கள் நெருக்கமாக இருந்ததாகவும், உளவு பார்த்ததாகவும் இவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களை கண்காணிக்கும் முடிவில் இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை களமிறங்கி உள்ளது. இதில் முன்னதாக அலிபாபா,டென்சென்ட் நிறுவனங்கள் சீனாவின் ராணுவத்திற்காக சில புரொஜெக்ட்களை செய்ததாக கூறப்படுகிறது.

என்ன திட்டம்
அதாவது சீனாவின் ராணுவத்திற்காக இவர்கள் சில ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பாதுகாப்பு துறையில் இவர்கள் தீவிர கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனங்கள் மீது உளவுத்துறை கவனம் செலுத்தி உள்ளது . அதிலும் அலிபாபா நிறுவனம் இந்தியாவில் பேடிஎம் , சோமேட்டோ, பிக் பேஸ்கெட், ஸ்நாப்டீல், எஸ்பிரஸ்பெஸ் ஆகிய நிறுவனங்கள் மீது முதலீடும் செய்துள்ளது.
Recommended Video

ஏதோ தொடர்பு
சீனாவின் 7 நிறுவனங்களும் எதோ ஒரு வகையில் சீனாவின் ராணுவத்துடன் தொடர்பில் இருந்துள்ளது. ராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க தற்போது மத்திய உளவுத்துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இவர்கள் மீது நேரடியாக எந்த புகாரும் வைக்கப்படவில்லை. முன்னதாக இந்தியாவில் 5ஜி ஏலத்தில் இருந்து ஹுவாவே நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications