இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் மத்திய அரசு அதிரடியான சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் சாதாரண பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது? இதனால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் என்பது குறித்த நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தைச் சீர்செய்யவும், பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இப்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

India Fuel Restrictions India Petrol diesel

சர்வதேச சூழல்

தற்போது நிலவி வரும் சர்வதேச அரசியல் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்தியாவில் பொதுமக்களைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை பெரியளவில் உயர்த்தப்படவில்லை. அதேநேரம் தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு விற்கப்படும் மொத்த விற்பனை விலை சந்தை நிலவரப்படி அதிகமாக உள்ளது.

டீசல் ரேட்

உதாரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் பெட்ரோல் பங்குகளில் ரூ. 99.66க்கு கிடைக்கிறது. ஆனால், அதே டீசலை மொத்தமாக வாங்கும் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் ரூ. 134.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப் பெரிய விலை வித்தியாசம் (சுமார் 39 ரூபாய்) காரணமாகப் பெரிய நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டீசலை மொத்த விற்பனை நிலையங்களில் வாங்காமல், சாதாரண பெட்ரோல் பங்குகளில் வந்து வாங்கத் தொடங்கின. இதனால் பெட்ரோல் பங்குகளில் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

இதைத் தடுக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நேற்று ஜூன் 11ம் தேதி இது தொடர்பாக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற மொத்த நுகர்வோர் இனி சாதாரண பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வாங்க முடியாது. அவர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரத்தியேக மையங்களிலேயே எரிபொருளை வாங்க வேண்டும்.

200 லிட்டர்

பெட்ரோல் பங்குகளில் ஒரு வாகனத்திற்கு அல்லது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும். டீசலை வாகனங்களுக்கு நேரடியாக அல்லது PESO (Petroleum and Explosives Safety Organisation) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கண்டெய்னர்களில் மட்டுமே எரிபொருளை வாங்க முடியும். பெட்ரோல் பங்குகளில் வாங்கும் எரிபொருளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு மறுவிற்பனை செய்யக்கூடாது. அடுத்த 90 நாட்களுக்கு இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள் பங்குகளில் மொத்தமாக எரிபொருளை வாங்குவதால், சாதாரண வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் டீசல் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விலை குறைவாகக் கிடைப்பதால் எரிபொருளைப் பதுக்கி வைத்துக் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை பாயும்

இந்த விதிகளை மீறுபவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், எரிபொருள் பதுக்கல், கறுப்புச் சந்தை விற்பனை மற்றும் விதிகளுக்குப் புறம்பாக எரிபொருள் வாங்குவதைக் கண்காணிக்க மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் பெரிய நிறுவனங்களுக்குத் தான். சாதாரண கார், பைக் மற்றும் லாரி வைத்திருக்கும் பொதுமக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+