இந்தியா குளோபல் வீக் 2020: இந்தியர்கள் எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.. பிரதமர் மோடி உரை!
டெல்லி: இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உலக நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்னிலையில் பேசி வருகிறார். இந்தியர்களை போல உலகில் திறமையான மக்கள் யாரும் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Recommended Video
யுகேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மீடியா நிறுவனமான இந்தியா ஐஎன்சி (India Inc) இந்த ''இந்தியா குளோபல் வீக் 2020 (India Global Week 2020)" நடத்தப்பட உள்ளது. இந்த முறை ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்க உள்ளது. வருடாந்திர நிகழ்வான இதில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டு உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பியூஸ் கோயல் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ரவி சங்கர், மஹேந்திர நாத் பாண்டே ஆகியோரும் இதில் பேச இருக்கிறார்கள்.
இதில் மொத்தம் 5000 உலக வல்லுனர்கள் பங்கேற்கிறார்கள். 30 நாடுகள் கலந்து கொள்கிறது. அதேபோல் 75+ நிகழ்வுகள் இதில் நடக்க உள்ளது. 250+ பேர் இதில் பேச உள்ளனர். இந்தியா ஐஎன்சி நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் லட்வா இது குறித்து தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியில் பேசுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
பிரதமர் மோடியின் பேச்சு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் குரலை உலகம் கேட்க இது சரியான தருணம், என்று கூறியுள்ளார். இதில் பிரதமர் மோடி முதலீடுகள் குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும், இந்தியாவின் வருங்கால பொருளாதார திட்டங்கள் குறித்தும் பேசினார் . உலக அளவில் பிரதமர் மோடியின் பேச்சு கேட்கப்பட்டது. இதனால் இந்த நிகழ்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனா பரவல் குறித்து இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.அதே சமயம் பொருளாதாரம் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். இயற்கையை அதிகம் மதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இயற்கையை தாய் போல மதிக்கும் நாடு இந்தியா. கடந்த 6 வருடங்களில் இந்தியா பெரிய அளவில் முன்னேறி உள்ளது. இந்தியர்கள் எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்ந்து இருக்கிறது.
மத்திய அரசின் நிதி உதவி மக்களுக்கு நேரடியாக சென்று உள்ளது. ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்ந்துள்ளது.உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது. இந்தியாவில் முதலீடுகள் செய்ய அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். உலகிலேயே இந்தியாதான் முதலீடு செய்ய எளிமையான நாடாக இருக்கிறது.
இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான தாயகம்.உலகில் இந்தியாவை போல வேறு நாடு கிடையாது , என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!












Click it and Unblock the Notifications