மக்களின் பொறுமை காரணமாக கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.. மோடி புகழாரம்
டெல்லி: நாட்டு மக்களிடம் இன்று காலை உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர், லாக்டவுனின் பலன்களை பட்டியலிட்டு பாராட்டினார்.
Recommended Video
அவர் கூறியதாவது: உங்கள் பொறுமை காரணமாக கொரோனா வைரஸின் பரவல் மற்றும் மோசமான விளைவுகளை இந்தியா கட்டுப்படுத்த முடிந்தது. தேசத்தை காப்பாற்ற நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள்.

இந்திய குடிமக்கள் மகத்தான தியாகங்களைச் செய்து நாட்டைக் காப்பாற்றியுள்ளனர். நாட்டிற்கு முதலிடம் கொடுத்து, ராணுவப் படையினராக மாறி, உங்கள் கடமைகளை நிறைவேற்றியதற்கு நன்றி.
இந்தியா பண்டிகைகளால் நிறைந்துள்ளது, நீங்கள் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், பண்டிகைகளை கொண்டாடுகிறீர்கள். உங்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். பண்டிகைகாலங்களிலும் லாக்டவுனை கடைபிடித்த உங்கள் பொறுமையை நான் மெச்சுகிறேன்.
நாட்டைப் பாதுகாக்க இந்திய மக்கள் பல நாட்களாக சகித்துக்கொண்டிருக்கும் சிரமங்களை நான் அறிவேன். உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுத்திருக்காவிட்டால், மிக மோசமான பாதிப்பை சந்தித்திருப்போம். இப்போது உலகிலேயே, இந்தியாவில்தான், கொரோனா பரவல் குறைவாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications