Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அரசு நிதியுதவி தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் ஹவுஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் சிவில் உரிமைகள் குறைந்து வருவதாகவும், முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன என்பது உள்பட பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தது.

இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, இந்திய அரசு தனது குடிமக்கள் அனைவரையும் நாட்டின் அரசியலமைப்பின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி சமமாக கருதுகிறது மற்றும் அனைத்து சட்டங்களும் பாகுபாடின்றி பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தது.

ஊடகவியலாளர்கள் உட்பட நாட்டின் அனைத்து குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கும் இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் கூறியது.

இந்தியா மீது சரமாரி குற்றச்சாட்டு

இந்தியா மீது சரமாரி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் சிவில் உரிமைகள் குறைந்து வருவதாக அமெரிக்க அரசு நிதியுதவி தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கை வெளியிட்டு குற்றம் சாட்டியது. மேலும் வடகிழக்கு டெல்லி கலவரம், அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டங்களை பயன்படுத்துதல், நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்தோருக்கு நெருக்கடி ஏற்படுத்துதல் ஆகிய குற்றசாட்டுகளை இந்தியா மீது அந்த தொண்டு நிறுவனம் முன்வைத்தது.

ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர்

ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர்

இந்தியாவில் பல இந்து தேசியவாத அமைப்புகளும் சில ஊடகங்களும் முஸ்லீம்-விரோத கருத்துக்களை ஊக்குவிக்கின்றன. பசுக்களை படுகொலை செய்ததாக அல்லது தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற பல்வேறு நிறுவனங்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர் என்றும் ஃப்ரீடம் ஹவுஸ் சாராமரியாக குற்றம் சாட்டியது.

மிகவும் தவறானவை

மிகவும் தவறானவை

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா அதிரடி பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அமெரிக்க தொண்டு நிறுவனம் ஃப்ரீடம் ஹவுஸ் இந்தியா மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. தவறாக வழிநடத்தக்கூடியவை. இந்தியாவில் பல மாநிலங்கள் அதன் கூட்டாட்சி கட்டமைப்பின் கீழ் தேசிய மட்டத்தில் உள்ள கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளால் ஆட்சி செய்யப்படுகின்றன.இது ஒரு சுயாதீனமான தேர்தல் அமைப்பால் நடத்தப்படுகிறது.

இந்திய சட்டம் சரியாக செயல்படுகிறது

இந்திய சட்டம் சரியாக செயல்படுகிறது

இந்திய அரசு தனது குடிமக்கள் அனைவரையும் நாட்டின் அரசியலமைப்பின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி சமமாக கருதுகிறது மற்றும் அனைத்து சட்டங்களும் பாகுபாடின்றி பயன்படுத்தப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் சட்டத்தின் சரியான செயல்முறை பின்பற்றப்படுகிறது. ஜனவரி 2019 இல் வடகிழக்கு டெல்லி கலவரம் குறித்து இந்திய அரசு சட்டம் ஒரு பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான முறையில் விரைவாக செயல்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த விகிதாசார மற்றும் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஊடகவியலாளர்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம்

ஊடகவியலாளர்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம்

ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் அரசுடன் கலந்துரையாடல், விவாதம் மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். ஊடகவியலாளர்கள் உட்பட நாட்டின் அனைத்து குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கும் இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு சிறப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+