Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் 5 நாள் தான் இருக்கு.. இந்திய ராணுவம் மொத்தமாக கிளம்பிவிடும்.. மாலத்தீவு பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா மாலத்தீவு இடையே உரசல் தொடரும் நிலையில், அங்குள்ள இந்திய ராணுவம் இன்னும் 5 நாட்களில் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்டமான மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருந்தனர். அங்குத் தீவுகளுக்கு இடையே நோய்வாய்ப்பட்டவர்களை அழைத்துச் செல்வதில் சிரமம் நிலவி வந்த நிலையில், அவர்களுக்கு உதவ இந்திய ராணுவம் அங்கு இருந்தது.

India Maldives is reviewing withdrawal of Indian military personnel from the island nation


நோயாளிகளை எளிதாகச் சிறு தீவுகளில் இருந்து அழைத்து வர இந்தியா ஹெலிகாப்டர் ஒன்றை அளித்து இருந்தது. அந்த ஹெலிகாப்டரை ஆப்ரேட் செய்யவும் பராமரிக்கவும் இந்திய ராணுவத்தினர் அங்கு இருந்தனர்.

முய்சு: இருப்பினும், இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முய்சு கூறினார். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் முய்சு இதைத்தான் பிரதான பிரச்சாரமாகவே முன்னெடுத்து இருந்தார். இதனால் தேர்தலில் வென்ற உடன் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மே மாதத்திற்குள் இந்திய டீம் வெளியேறும் என முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே முதல் டீம் மாலத்தீவில் இருந்து வெளியேறிவிட்டது. அவர்களுக்குப் பதிலாக ராணுவம் சாராத தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹெலிகாப்டரை ஆப்ரேட் செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.

லிமிட் அவ்வளவுதான்! இந்தியர்கள் யாரும் தேவையில்லை! சீன ஒப்பந்தத்திற்கு பின் மாலத்தீவு ராணுவம் அடாவடி


ஆலோசனை: இதற்கிடையே மாலத்தீவுகளில் இருந்து இந்தியா வீரர்களை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இது தொடர்பான இருதரப்பு உயர்மட்டக் குழுவின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. வரும் மே 10ஆம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வாபஸ் பெற வேண்டும் என முய்சு கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இருதரப்பு ஒத்துழைப்பு தொடங்கிப் பல விவகாரங்கள் குறித்து இரு தரப்பும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வளர்ச்சி திட்டங்கள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது. மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேறுவது தொடர்பாக இதில் எந்தவொரு பாயிண்டும் இல்லை.


இன்னும் 5 நாட்கள்: அதேநேரம் மாலத்தீவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அது குறித்த தகவல்கள் உள்ளன. அதில், "இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பரஸ்பர நலன்கள் பற்றிய ஆலோசனை செய்யப்பட்டது. மே 10ஆம் தேதிக்குள் மீதமிருக்கும் இந்திய ராணுவத்தையும் திரும்பப் பெறப்படும் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த உயர்மட்ட மையக் குழுவின் ஐந்தாவது கூட்டம் ஜூன் அல்லது ஜூலை மாதம் மாலேயில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+