இந்தியாவில் கொரோனா பாதிப்பு புது உச்சம்.. சமூக பரவலாக மாறவில்லை.. அடித்துச் சொல்கிறது ஐசிஎம்ஆர்
டெல்லி: இந்தியாவில், கொரோனா, சமூக பரவல் கட்டத்தை எட்டவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்).
ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா, இதுபற்றி கூறுகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 83 மாவட்டங்களில் 0.73 சதவீத மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

15 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா சமூக பரவல் நிலையில் இல்லை. கொரோனாவை சமாளிக்க கண்டறிதல், சோதனை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவைதான் முக்கியம். நமது பாதுகாப்பை விட்டுவிடக்கூடாது.
ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இந்தியாவின் இறப்பு விகிதம் 0.59 ஆகும், இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும். ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இந்தியாவின் பாதிப்பு நிலவரம், 20.77 ஆகும். இது உலகிலேயே மிகக் குறைவானதாகும். உலகின் சராசரி 91.67 ஆகும்.
மக்களிடையே கொரோனா பரவுவதை மதிப்பிடுவதற்காக ஐ.சி.எம்.ஆர் நாடு முழுவதும் ஒரு செரோ-கணக்கெடுப்பை நடத்தியது. 80 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக, 9,996 கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. மேலும், 357 நோயாளிகள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.
மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.86 லட்சம் கேஸ்களாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக தினசரி, 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா கேஸ்கள் பதிவாகும் நிலையில், ஐசிஎம்ஆர் இவ்வாறு ஒரு தகவலை தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications