இந்திய பகுதிகளுடன் புதிய மேப் வெளியிட்டு சீண்டிய நேபாளம்- மத்திய அரசு கடும் எதிர்ப்பு
டெல்லி: இந்திய பகுதிகளுடன் புதிய மேப் வெளியிட்டு சீண்டிய நேபாளத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
நேபாள எல்லையில் உள்ள லிபுலேக், லம்பியாதூரா, கலபாணி ஆகியவற்றை நீண்டகாலமாக அந்த நாடு உரிமை கோரி வருகிறது. அண்மையில் மத்திய அரசு இந்த பகுதிகளில் சாலை அமைத்தது.

அதற்கும் நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதே இந்த சர்ச்சை பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்தது நேபாளம்.
அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியாவையே பெரும்பகுதி சார்ந்திருக்கும் நேபாளம் திடீரென இப்படி போர்க் கொடி தூக்கியதன் பின்னணியில் சீனாவின் தூண்டுதல் இருப்பதும் சுட்டிக்காட்டபட்டது. ஏற்கனவே சிக்கிம் எல்லைகளில் இந்திய படைகளுடன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் மோதல் போக்கை சீனா கடைபிடித்து வருகிறது.
இந்த பின்னணியில் இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலபாணி போன்றவற்றை தங்களது நாட்டி பகுதியாக்கி புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
நேபாளத்தின் இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும் மத்திய அரசு கடுமையாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications