இதுதான் எங்களால் முடியும்.. கட் அன்ட் ரைட்டாக சொன்ன இந்தியா! வரி விஷயத்தில் அமெரிக்காவுக்கு செக்
டெல்லி: பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறோம் என்று சொல்லி, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரியை விதித்திருந்தது. வரி காரணமாக திருப்பூர் தொடங்கி நாடு முழுவதும் நகரங்களில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வரி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர, இந்தியா பேச்சுவார்த்தையில் இறங்கியது. தற்போது இந்தியா தரப்பில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து அறிக்கை அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி இதில் முடிவெடுக்க வேண்டியது அமெரிக்காதான்.
அமெரிக்காவுக்கு, இந்தியா இறுதி திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதில், பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆப்பிள் மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி மீதான வரிகளை நீக்க இந்தியா முன் வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இருப்பினும் இந்த சலுகைகள் அமெரிக்கா தரப்பிலிருந்தும் வழங்கப்பட்டால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

ஏற்கனவே இந்தியாவுக்கு 25% விதிக்கப்பட்டு இருந்த வரியை விட, தற்போது கூடுதலாக 25% விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த கூடுதல் வரியை நீக்குவதில்தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. 50% வகையை இந்தியாவில் நிச்சயமாக தாங்க முடியாது. ஆனால் 25% வரியை சமாளித்து விடலாம். எனவேதான் இறக்குமதி மீதான வரிகளை நீக்க இந்தியா முன் வந்திருக்கிறது.
இந்தியா எடுத்த முடிவுக்கு ரிசல்ட் தெரிய தொடங்கியிருக்கிறது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜாமிசன் கிரீர், இந்தியாவிடம் இருந்து நாங்கள் பெற்றதிலேயே இதுதான் மிகச் சிறந்த சலுகை என்று கூறியிருக்கிறார். தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை குழுக்கள் தங்கள் வேலையை முடித்து விட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்கிற முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் எடுக்க வேண்டும் என்றும், அந்நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை காரணம் காட்டிதான், இந்தியா மீது கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது. எனவே இந்தியா எனது ரஷ்ய என்ன இருக்கும் அதை குறைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்ய என்னை இறக்குமதி 31% அளவில் குறைந்திருக்கிறது. இதை காட்டி அமெரிக்காவுடன் பேரம் பேச முடியும்.
எல்லா விஷயத்திலும் தற்போது இந்தியா தனது தரப்பை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது. இனி முடிவெடுக்க வேண்டியது அமெரிக்காதான். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். அவரது வருவை அமெரிக்காவுக்கு ஸ்டராங்கான மெசேஜை கொடுத்திருக்கிறது. ஒருவேளை அமெரிக்கா வரியை குறைக்கவில்லை எனில், மீண்டும் ரஷ்யாவுடன் இந்தியா கை கோர்க்கும். இது அமெரிக்காவுக்கு சிக்கல். எனவே என்ன முடிவெடுப்பது? என அமெரிக்கா யோசித்து வருகிறது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
அமெரிக்காவுக்கு முதல் பெரிய அடி.. ஈரான் நடத்திய தாக்குதலில் F-35 விமானம் சேதமடைந்ததாக தகவல்! -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு












Click it and Unblock the Notifications