Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 4,092 பேர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியதாக ஒருநாள் கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது சற்று குறைய தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் 4,092 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் ஒருநாள் கொரோனா 3 லட்சத்தை தாண்டியதாக இருந்து வந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 4,092 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    India-வில் குறையும் தினசரி கொரோனா பாதிப்பு.. ஆனால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

    உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,37,01,233 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 33,92,802 ஆகும். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14,21,53,449.

    கொரோனா மொத்த பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் ஒருநாள் பாதிப்பில் உலகில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியதாக இருந்து வந்தது.

    2.81 லட்சம் பேருக்கு பாதிப்பு

    2.81 லட்சம் பேருக்கு பாதிப்பு

    இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,49,64,925. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,11,67,609.

    அதிகமாகும் மரணங்கள்

    அதிகமாகும் மரணங்கள்

    ஆனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,092 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொர்ரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,74,411. இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,22,905.

    மகா., தமிழகத்தில் அதிகம்

    மகா., தமிழகத்தில் அதிகம்

    மாநிலங்களில் மகாராஷ்டிராவில் நேற்று 34,389, தமிழகத்தில் 33,181 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. கர்நாடகாவில் 31,531, கேரளாவில் 29,704 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

    மகாராஷ்டிராவில் மரணங்கள்

    மகாராஷ்டிராவில் மரணங்கள்

    மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான கொரோனா மரணங்கள் தொடருகின்றன. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 974 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கர்நாடகாவில் 403, தமிழகத்தில் 311, உத்தரப்பிரதேசத்தில் 308, டெல்லியில் 262 பேர் கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+