இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,357 ; ஆக்டிவ் கேஸ்கள் 32,000-த்தை தாண்டியது!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32,000-த்தை தாண்டியது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,357. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கேஸ்கள் எண்ணிக்கை 32,814. முந்தைய நாள் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,166 ஆக பதிவாகி இருந்தது. மேலும் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 31,194. ஆகவும் இருந்தது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 684,929,240. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 6,837,646. உலக நாடுகளில் கொரோனாவால் சிகிச்சை பெற்று மீண்டவர்கள் எண்ணிக்கை 657,718,054. உலகம் முழுவதும் நேற்று 47,167 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. உலக நாடுகளில் கொரோனாவால் 104 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் டெல்லியில் அதிகபட்சமாக 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,41,92,837 ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம்: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 659 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 32,814 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.07 சதவீதமாகும்.
தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.74 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,726 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,92,837 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் 5,357 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 3.39% வாராந்திர பாதிப்பு விகிதம் 3.54%
இதுவரை மொத்தம் 92.27 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,57,894 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications