Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயரை மாற்றுவதால் உண்மை மாறுமா? அருணாச்சல பிரதேச விவகாரத்தில் அத்துமீறும் சீனா.. மத்திய அரசு பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மறுபெயரிட்டு சீனா அத்துமீறியிருக்கிறது. இதற்கிடையே சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெறுமன மறுபெயரிடுவதால் எதுவும் மாறப்போவதில்லை என்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப் பகிர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது எனச் சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளையும் கொடுக்கும்.

India Rejects China s Arunachal Pradesh Renaming Undeniable Reality Stands

சீனா

அப்படித்தான் சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களின் பெயர்களைச் சீன மொழியில் மறுபெயரிடுவதாகச் சீனா அறிவிக்க முயன்றது. இருப்பினும், அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, பெயரை மாற்றுவதால் மட்டுமே அவை இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் போய்விடாது எனக் காட்டமாக மறுத்துள்ளது.

வெளியுறவுத்துறை அறிக்கை

இந்த விவகாரத்தில் சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட்டு, சீனா தொடர்ந்து வீணான மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் கவனித்துள்ளோம்.

இந்தியாவின் கொள்கையைச் சீனா ஏற்க வேண்டும்.. சீனாவின் இதுபோன்ற முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது.. இப்போதும் இருக்கிறது.. இனியும் அப்படியே இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதைச் சும்மா மறுபெயரிடுவதால் மாற்ற முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை இல்லை

அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளின் பெயர்களைச் சீனா மாற்றுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2024 ஏப்ரல் மாதம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே உள்ள 30 இடங்களுக்கு மறுபெயரிடுவதாகச் சீனா நான்காவது பட்டியலை வெளியிட்டது.

அருணாச்சலப் பிரதேசத்தில் தரப்படுத்தப்பட்ட புவியியல் பெயர்கள் என்று அழைக்கப்படும் பட்டியலைச் சீனா வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்றும் அதன் பெயரை சாங்னான் என்றும் குறிப்பிட்டு சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

40 இடங்கள்

அந்தப் பகுதியில் உள்ள 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை, 11 குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒரு நிலப்பகுதி ஆகியவற்றுக்குச் சீனா மறுபெயரிடுவதாக அறிவித்திருந்தது. இது மட்டுமின்றி சீன அமைச்சகம் மேப் சாட்டிலைட் படங்களையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சல பிரதேச விவகாரம்

அருணாச்சலப் பிரதேசம் தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இது சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியான திபெத் பகுதியுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. 1960கள் முதலே அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் சீனா தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது.

குறிப்பாகக் கடந்த 2017ல் ஆறு இடங்களுக்கான பெயர்களை மாற்றி சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது.. அதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் 15 இடங்களின் பெயர்களை மறுபெயரிடுவதாகச் சொல்லி சீனா இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து 2023ஆம் ஆண்டில் 11 இடங்களுக்கு மீண்டும் மறுபெயரிடுவதாக அறிவித்து சீனா இன்னொரு பட்டியலை வெளியிட்டது. அதேநேரம் ஒவ்வொரு முறையும் சீனா இதுபோல மறுபெயரிடும்போது இந்தியா அதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+