Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் ஊரடங்கு? "அப்படியொரு திட்டம் பரிசீலனையில் கூட இல்லை!" மத்திய அரசு திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் 4வது வாரமாகப் போர் தொடர்கிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா போன்ற லாக்டவுன் போடப்படலாம் எனத் தகவல் பரவிய சூழலில், அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஊரடங்கை அமல்படுத்தும் எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 4வது வாரமாகத் தொடர்கிறது. அடுத்த 10 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்த போவதாக அமெரிக்கா சொல்லியுள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தரப்பு இதுவரை எதுவும் சொல்லவில்லை.

India Rejects Lockdown Rumours Amid Middle east crisis No Restriction Plan Under Consideration

அதேநேரம் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க லாக்டவுன் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்தது.

சமூக வலைத்தளங்களில் ஊரடங்கு குறித்த தகவல்கள் பரவின. இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ஊரடங்கை அமல்படுத்தும் எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

ஈரான் போர் சூழல் காரணமாக ஊரடங்கு எனப் பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+