உக்கிரமான கொரோனா 2ஆவது அலை.. 9 நாட்களில் இறப்பு எண்ணிக்கை முழு ஏப்ரலை விட 50 சதவீதம் அதிகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 9 நாட்களில் கொரோனாவால் 20,657 பேர் பலியாகிவிட்டார்கள். இது ஏப்ரல் மாதம் 1 முதல் 28 ஆம் தேதி வரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் 3.60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

India reports 20 thousand deaths last 9 days after second wave

இதனால் இந்தியாவில் மொத்தமாக 1,79,97,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் முதல் முறையாக இந்தியாவில் 3,293 பேர் பலியாகிவிட்டனர். இதன் மூலம் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது.

மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்தியாிவல் கடந்த 1ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 38,260 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். ஆனால் கடந்த ஏப்ரல் 20 முதல் 28-ஆம் தேதி வரை 20,657 பேர் பலியாகிவிட்டனர்.

கடந்த ஏப்ரல் முழுவதும் வெளியான பலியானோரின் எண்ணிக்கையை காட்டிலும் 50 சதவீதத்திற்கு மேல் கடந்த 9 நாட்களில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை உள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் 13 வரை ஒரு நாளைக்கு 1000-த்தை விட குறைவான எண்ணிக்கையிலேயே இறந்தனர்.

ஏப்ரல் 14 முதல் 17 வரை ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை என்பது 1500-ஐ விட குறைவாகவே இருந்தது. ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரு நாளைக்கு இறப்போரின் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது. அதன் பின்னர் 21 ஆம் தேதி ஒரு நாளைக்கு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் இன்றைய தினம் ஒரு நாள் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+