இந்தியாவில் தொடர்ந்து கணிசமாக குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 38,667 பேருக்கு தொற்று உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

India reports 36,083 new Coronavirus cases and 493 deaths

நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,667. நாட்டிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 20,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கேரளாவில் மொத்தம் 114 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,85,336. கேரளாவுக்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் 1893, கர்நாடகாவில் 1338, ஆந்திராவில் 1461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஒடிஷாவில் 1041, மேற்கு வங்கத்தில் 639, அஸ்ஸாமில் 929, மணிப்பூரில் 633, மேகலாயாவில் 411, மிசோரமில் 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 493 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+