நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?
டெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதால், ஜூலை 17ம் தேதி முதல் இந்த பணிகள் தொடங்க இருக்கின்றன.
140 கோடிக்கும் அதிகமான மக்களை கணக்கெடுக்க, 30 லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்பட இருக்கின்றன.

கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட தாமதத்திற்கு பின்னர், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை தொடர்ந்து, தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெறுகின்றன. ஏப்.1 முதல் மே.15 வரை இந்த பணிகள் நடைபெறும். இரண்டாம் கட்ட பணிகள் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்.
முதல்கட்ட கணக்கெடுப்பில், வீடுகளின் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்து 33 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். வீடு கூரை வீடா? ஓட்டு வீடா? மாடி வீடா? கழிப்பறை வசதி இருக்கிறதா? என்பது குறித்த கேள்விகள் இதில் இடம்பெற்றிருக்கும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில், கல்வி, இடப்பெயர்வு, பிறப்பு விகிதம் என சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள், காகிதங்களில் அல்லாது, டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்படுகின்றன. பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் போர்ட்டலில் விவரங்களை பதிவேற்றலாம்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications