நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?
டெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதால், ஜூலை 17ம் தேதி முதல் இந்த பணிகள் தொடங்க இருக்கின்றன.
140 கோடிக்கும் அதிகமான மக்களை கணக்கெடுக்க, 30 லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்பட இருக்கின்றன.

கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட தாமதத்திற்கு பின்னர், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை தொடர்ந்து, தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெறுகின்றன. ஏப்.1 முதல் மே.15 வரை இந்த பணிகள் நடைபெறும். இரண்டாம் கட்ட பணிகள் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்.
முதல்கட்ட கணக்கெடுப்பில், வீடுகளின் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்து 33 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். வீடு கூரை வீடா? ஓட்டு வீடா? மாடி வீடா? கழிப்பறை வசதி இருக்கிறதா? என்பது குறித்த கேள்விகள் இதில் இடம்பெற்றிருக்கும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில், கல்வி, இடப்பெயர்வு, பிறப்பு விகிதம் என சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள், காகிதங்களில் அல்லாது, டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்படுகின்றன. பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் போர்ட்டலில் விவரங்களை பதிவேற்றலாம்.












Click it and Unblock the Notifications