நாட்டின் முதல் தனியார் ரயில் 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்'.. முதல் மாதமே சூப்பர் லாபம்!
டெல்லி: நாட்டின் முதல் தனியார் ரயிலான , 'தேஜஸ்' ரயில், முதல் மாதத்தில், 70 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிட்டத்தட்ட ரூ .3.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
நாட்டின் தலைநகர் டில்லி - உத்தர பிரதேச தலைநகர், லக்னோ இடையே, அதி நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.
இதன் மூலம் நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையை இந்த தேஜஸ் ரயில் பெற்றது.

6 நாட்கள் இயக்கம்
இந்த தேஜஸ் ரயில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படுகிறது. செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் ரயில் சேவை நடைபெறுகிறது.

25லட்சம் இன்சூரன்ஸ்
ரயிலை இயக்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளுக்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. தரமான உணவு, ரூ .25 லட்சம் வரை இலவச காப்பீடு மற்றும் தாமதங்கள் ஏற்பட்டால் இழப்பீடு போன்ற வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

85 சதவீதம் புக்கிங்
முற்றிலும் . குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தேஜஸ் ரயிலில், சாதாரண இருக்கை வசதிக்கு, 1,280 ரூபாயும், 'எக்ஸ்சிக்யுட்டிவ்' இருக்கை வசதிக்கு, 2,450 ரூபாயும், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.. அனைத்து நாட்களிலுமே 80 முதல் 85 சதவீதம் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகியே காணப்படுகிறது.

ரூ .3.70 கோடி வருவாய்
அக்டோபர் 5 முதல் அக்டோபர் 28 வரை (21 நாட்கள், ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் ஓடுவதால்), ரயிலை இயக்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி செலவழித்த தொகை சுமார் 3 கோடி ரூபாய் என்று ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிட்டத்தட்ட ரூ .3.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

70 லட்சம் லாபம்
இதன் மூலம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிநவீன ரயிலை இயக்க ஒரு நாளைக்கு சராசரியாக ரூ .14 லட்சம் செலவழித்துள்ள ரயில்வே துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி , பயணிகள் கட்டணத்தில் இருந்து தினமும் ரூ .17. 50 லட்சம் சம்பாதித்தது. இந்த , தேஜஸ் ரயில் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் 70 லட்சம் ரூபாய் ஐ.ஆர்.சி.டி.சிக்கு லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் தனியார்கள் முக்கிய ரயில்களை இயக்க அதிக ஆர்வம் காட்டுவதற்கு இந்த தனியார் ரயில் முன்னோடியாக அமைந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications