கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரோன் வைரஸ்.. இந்தியாவில் முதல்முறை கண்டுபிடிப்பு.. மத்திய அரசு
டெல்லி: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து சுகாதாரத் துறை இணை செயலாளர் லவா அகர்வால் கூறுகையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அது ஓமிக்ரானா என சோதனை செய்த போது அது ஓமிக்ரான் என தெரியவந்தது. அவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒருவருக்கு 65 வயது, இன்னொருவருக்கு 45 வயது.

பெங்களூர்
இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து நேற்று இரவு பெங்களூர் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்புடைய நபர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட அதிகமாக உள்ளது. நாட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்களில் 55 சதவீத கேஸ்கள் இந்த இரு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவது அதிகரித்து வருகிறது.

தடுப்பூசி
நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐரோப்பா பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. உலக கொரோனா கேஸ்களில் 70 சதவீதம் பேர் ஐரோப்ப நாட்டை சேர்ந்தவர்கள்தான். கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஐரோப்பா நாடுகளில் 2.75 லட்சம் புதிய கேஸ்களும் 31 ஆயிரம் இறப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா நாடுகள்
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது தென்கிழக்காசிய நாடுகளான இந்தியா உள்பட 12 நாடுகளில் கொரோனாவால் வெறும் 1.2 லட்சம் பேர் மட்டுமே கடந்த வாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் கொரோனா பாதித்த கேஸ்களில் தென்கிழக்காசிய நாடுகளில் பாதிப்பானது வெறும் 3.1 சதவீதமாகும். கொரோனா கேஸ்கள் தென்கிழக்காசிய நாடுகளில் குறைந்து வருகிறது. என்றார்.

உருமாறிய கொரோனா
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் எனும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருவோருக்கு பயண தடை விதிக்கப்பட்டது. இதுவரை 29 நாடுகளில் 373 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். இரு முறை உருமாறிய டெல்டாவை விட ஓமிக்ரான் கொடியது என்பதால் இது குறித்து அச்சம் எழுந்துள்ளது. இந்த ஓமிக்ரான் 32 முறை உருமாறுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications