கவனமாக பேசுங்கள்.. ஈரானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்.. தூதருக்கு சம்மன்.. வெடிக்கும் சண்டை!
டெல்லி கலவரத்திற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை சார்பாக இந்தியாவிற்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லி கலவரத்திற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை சார்பாக இந்தியாவிற்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி கலவரத்தை ஈரான் கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரிசையாக கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது.
பல நூறு வருடங்களாக இந்தியாவும், ஈரானும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தியா அரசும் அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும், என்றுள்ளார்.

வேறு என்ன
மேலும் அவர் தனது கண்டனத்தில் முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளர விட கூடாது, என்று மிகவும் கடுமையாக சாடி இருக்கிறார். இதில் அனைத்து இந்தியர்கள் என்ற வார்த்தையில் அனைத்து என்பதை (ALL) என்று பெரிய வார்த்தைகளில் எழுதி உள்ளார். டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு எப்படி
தற்போது இதற்கு மத்திய அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், டெல்லியில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கள் மத்தியில் அமைதியும், நம்பிக்கையும் திரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். கூடுதலாக அங்கு எதுவும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள்
உலக நாடுகள், அமைப்புகள் டெல்லி கலவரம் குறித்து பேசும் போது கவனமாக பேச வேண்டும். மிக முக்கியமான கட்டத்தில் பேசும் நீங்கள், தவறான பொறுப்பற்ற கருத்துக்களை கூற கூடாது. இது தவறானது என்று ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்தியாவிற்கான ஈரான் தூதர் அலி செக்கெனிக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமே என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம்
இந்தியாவிற்கு எதிராக டெல்லி கலவரத்தின் போது இந்தோனேசியாதான் முதலில் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசை, இந்தோனேசியா கடுமையாக கண்டித்து இருந்தது. அதன்பின் துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்தியாவை கண்டித்து இருந்தது. தற்போது ஈரான் இந்தியாவை நேரடியாக கண்டித்துள்ளது. இதனால் இந்தியா மீது இஸ்லாமிய நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications