பிசிறு தட்டாமல் அடிக்கும் ஏவுகணை.. 2000 கி.மீ ரேஞ்ச்! இந்திய ராணுவம் புதிய சாதனை!
டெல்லி: இந்திய ராணுவம் அக்னி-பிரைம் ஏவுகணையை ரயிலிருந்து ஏவி சோதனை செய்திருக்கிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும், சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இது தாக்கி அழிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் ஏவுகணை, 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதல் முறையாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலிலிருந்து நேற்று ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.

இந்த ரயில் ஏவுதள அமைப்பை, முன் தயாரிப்புகள் ஏதுமின்றி, நாட்டின் ரயில்வே நெட்வொர்க் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். இது ராணுவ படைகளுக்குக் குறைந்த நேரத்தில் ஏவுகணைகளை ஏவும் திறனை வழங்குகிறது.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ராஜ்நாத்சிங் பதிவிட்டிருப்பதாவது, "இடைநிலைத் தூரம் தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த DRDO, வியூகப் படைகள் கட்டளை மற்றும் ஆயுதப் படைகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிகரமான சோதனை மூலம் ரயிலிலிருந்து ஏவுகணையை ஏவும் கேனிஸ்டரைஸ் செய்யப்பட்ட ஏவுதல் அமைப்பைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்னி-பிரைம் ஏவுகணை
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அக்னி-பிரைம் ஏவுகணை முக்கியமானது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கின்றன. அக்னி ஏவுகணைகளில் பல வகைகள் இருக்கின்றன. இதில் சில வகை ஏவுகணைகள், 3,500 முதல் 5,000 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சமே, எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு சென்று, அங்கிருந்து ஏவ முடியும் என்பதுதான்.
#WATCH | Raksha Mantri Rajnath Singh tweets, "India has carried out the successful launch of Intermediate Range Agni-Prime Missile from a Rail-based Mobile launcher system. This next-generation missile is designed to cover a range of up to 2000 km and is equipped with various… pic.twitter.com/kfDOjVpAeW
— ANI (@ANI) September 25, 2025
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இந்திய கால சூழலுக்கு ஏற்றார்போல சிறப்பாக தன்னை வடிவமைத்துக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகும். இதன் தாக்குதல் தன்மை மிகவும் துல்லியமானது. அதேபோல இதில் அணு குண்டுகளையும் பயன்படுத்த முடியும். சமீப காலமாக பாகிஸ்தானுடன் உரசல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த ஏவுகணை சோதனை ராணுவத்திற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications